Monday, December 7, 2020

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிசய சூரணம்


இந்த சூரணம் செரிமானம் மற்றும் எளிதாக மலம் கழிக்க மிகச் சிறந்த மருந்து எனலாம்.

இது இரைப்பைக் குழாயில் உள்ள அமிலச் சுரப்பை நடுநிலையாக்குகிறது மற்றும் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இந்தச் சூரணம் குடலில் உள்ள தந்துகளின் வாயிலாக உணவின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் புண்கள் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது மிகவும் நன்மை பயக்கும் சூரணமாகும்.
இந்த சூரணம் செய்யத் தேவையான பொருட்கள்:
--------------------------------------------------------------------
உலர்ந்த பெரிய நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், கற்கண்டு, கருப்பு மிளகு, ஏலக்காய், கிராம்பு, சுக்கு, மற்றும் வாய்விலங்கம் ஆகிய மூலிகைகளை நாட்டு மருந்துக் கடைகளில் தலா 50 கிராம் என வாங்கிக் கொண்டு அதனை வெயிலில் ஒரு நாள் நன்கு உலர்த்தி, ஈரமில்லாமல் எடுத்து மிக்ஷியில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
[குறிப்பு:- கடுக்காயை மட்டும் மிக்‌ஷியில் போடுவதற்கு முன்பாக அதனை சிறு சுத்தியலில் மேல் தோலை மட்டும் உடைத்து எடுத்துக் கொண்டு, உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விடவும். கடுக்காயில் கொட்டையைப் பயன் படுத்தவேண்டாம்.]
அதன் பிறகு அதனை ஒரு சல்லடையில் சலித்து எடுத்து, காற்று புகாத கண்ணாடி ஜாடியில் அல்லது பீங்கான் சாடியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.


சூரணத்தின் பயன்பாடு:
^^^^^^^^^^^^^^^^^
இந்த சூரணத்தை தினமும் இரண்டு வேளைகள் உணவுக்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தேங்காய் நீர் மற்றும் இளநீர் என இதில் ஏதாவது ஒன்றிலும் கலந்து குடிக்கலாம்.
நீரில் கலந்து குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் நல்ல தேனில் குழைத்து உண்ணலாம்.
இது நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை குடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் மூலமாக எடுத்துக் கொள்ளத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றது.
இந்தச் சூரணம் வயிறு சம்பந்தமான உபாதகளை எளிதில் போக்கி, உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகின்றது.
அதாவது, அடிக்கடி வயிற்று வலி, கடுமையான குடல் பிரச்சினைகள் மற்றும் வய்று எரியும் உணர்வுக்கு வழிவகுக்கும் குடல் இரைப்பை அழற்சி போன்றவைகளை குணப்படுத்துகின்றது.
இந்த இறைப்பை அழற்சியினால் உண்டாகும் அதிகப்படியான அமிலம் சுரத்தல், அஜீரணம், வயிற்றுப் பொருமல், வாயு உப்பிசம், வயிற்றில் கடமுடா சத்தம், அடிக்கடி ஏப்பம் மற்றும் சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனைகள் போன்ற அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளையும் இந்த சூரணம் சரி செய்கின்றது.
இந்த சூரணத்தை 21 நாட்கள் தொடர்ந்து இருவேளைகள் காலையும் , மாலையும் உணவுக்கு முன்பாக உட்கொண்டு வர, குடலில் இருந்து அதிகப்படியான அமிலத்தை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இத்துடன், இன்னும் சிலருக்கு குடல் வீங்கிய மோசமான திசு அடுக்குகளை திறம்பட சரி செய்து, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD - Gastroesophageal reflux disease) என்பது வயிற்றில் இருந்து அமிலம் பின் வாங்குவதன் மூலமாக உண்டாகும் உணவுக்குழாய் எரிச்சல், நெஞ்செரிச்சல், உண்டது எதுக்களித்தல், வாய்வு உப்பிசம் போன்ற பல்வேறு வயிறு பிரச்சனைகளை போக்கக் கூடிய அருமையான சூரணம் ஆகும்.
வயிற்றின் உட்புறத்தில் சுரக்கும் இந்த அமிலத்தால் வயிற்றுப் புண், நெஞ்செரிச்சல், மூச்சடைத்தல், காரம் தொண்டையில் ஏறுதல், நீர், மற்றும் உணவை எளிதாக உண்ண முடியாமல் அடைக்கின்ற சிரமம், வயிற்று எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் கொண்ட ஒரு மோசமான நோய் என்பதைத்தான் ஆங்கில மருத்துவம் GERD என்கின்றது.
உணவுக்குழாய் என்பது நமது இதயத்தின் பின்னால் உள்ளது என்பதினால், இந்த நெஞ்செரிச்சல் சில நேரங்களில் இதய உபாதகள் போன்றும் காணப்படும்.
ஆகவே, இரைப்பை உணவுக் குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறிலிருந்து இந்த சூரணம் வயிற்றைக் காக்கின்றது.
மேலும் இதே சூரணம் சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உண்டாகாமல், சிறு நீர் உப்புக்களை அகற்றுவதில் சாதகமாகவும், மற்றும் கால்சியம், ஆக்சலேட்டுகள் போன்ற சிறுநீர் உப்புகளை முழுவதுமாக அகற்றவும் உதவுகின்றது.
இத்துடன், சிறுநீரக குழாய்கள் மற்றும் அதற்கு இடையில் உள்ள திசுக்களின் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அதி அற்புதமான சூரணம் என்றால் அது மிகையாகாது.
நன்றி! 🙏

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...