Wednesday, July 13, 2022

செல் தொழிற்சாலை



மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில் நம் உடலும் ஒன்று. அது சுமார் 100 லட்சம் கோடி நுண்ணிய செல்களால் ஆனது. எலும்பு செல்கள், இரத்த செல்கள், மூளை செல்கள் என ஏராளாமான செல்களின் ஒட்டுமொத்த தொகுப்பே மனித உடல் எனலாம்.
நம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும், அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கின்றன. நம் தோலில் 100 பில்லியன் தோல் செல்கள் உள்ளன. நம் மூளையில் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளன. நாம் மூளையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம். நமது மூளை 1 குவாட்ரில்லியன் (1 மில்லியன் பில்லியன்) பிட் (Bit) அளவு தகவலைத் தாங்கக் கூடியது. நம் உடலில் 60 மில்லியன் ‘உணர்வு ஏற்பிகள்’ (receptors) உள்ளன. கண்களைப் பொறுத்தவரை 127 மில்லியன் விழித்திரை செல்கள் உள்ளன. இதன் பயனாகத்தான் நம்மால் 10 மில்லியன் வெவ்வேறு நிறவேறுபாட்டைக் காண இயலுகிறது.
நம் கண்களில் 120 மில்லியன் ‘கம்பி செல்’கள் (rod cells) மற்றும் 6 மில்லியன் ‘கூம்பு செல்’கள் (cone cells) உள்ளன. நமது கண் மட்டும் ஒரு டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் ஒளியியல் தீர்மானம் (digital resolution) 576 மெகா பிக்சல் கொண்டதாயிருக்கும்.
மூக்கில் 1000 நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் நம்மால் 50 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணர முடியும். நம் உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஓயாமல் ஓடுகிறது. அதிலே, 42 டிரில்லியன் சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன. இவைகள், சுமார் 42 பில்லியன் ரத்த நாளங்களில் பயணிக்கின்றன.
நாம் தினசரி 23,040 முறை மூச்சு விடுகிறோம். இதயம் தினசரி 1,15,200 முறை துடிக்கிறது. நம் உடலில் 640 தசைநார்களும், அதன் பயனாய் 360 தசைகூட்டுகள் (joints) உள்ளன. ஒவ்வொரு நாளும் நம் இதயம் தரும் சக்தியின் அளவால் நம்மால் ஒரு சாதாரண டிரக்கை 32 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்ல முடியும்.
சராசரி மனிதனின் வாழ்நாளில் நமது இதயம் ரத்தத்தை உடலில் பாய்ச்சும் அளவு 1.5 மில்லியன் பீப்பாய் அளவுக்கு சமம்.
நமது இதயம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும் தன் துடிப்பை உடனே நிறுத்தாது. ஏனெனில், இதயத்தில் உள்ள மின்சார உந்துவிசை சிறிது நேரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். நம் தலையில் சுமார் ஒரு லட்சம் மயிர்க்கால்கள் உள்ளன. தினசரி சுமார் 100 மயிரிழைகள் உதிர்கின்றன. சாதாரணமாய் மனித உடலில் தினசரி சுமார் 800 மி.லிட்டர் வியர்வை சுரக்கிறது. ஒரு வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் 300 எலும்புகள் இருக்கும். நாளாவட்டத்தில் குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து விடும்.
சாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சுமார் 23 ஆயிரம் லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான். நம் உடலில் இரும்பு சத்து இருப்பதை அறிவோம். இந்த இரும்பு சுமார் 7.5 செ.மீ. நீளமுள்ள சாதாரண அளவு ஆணியை உருவாக்கும் அளவுக்கு உள்ளது.
நம் உடலின் எல்லா செல்களில் உள்ள டி.என்.ஏ. (DNA) வைப் பிரித்து நீட்டி இழுத்தால், அதன் நீளம் 10 பில்லியன் மைல்கள் இருக்கும். இது நாம் பூமியிலிருந்து புளூட்டோ கிரகம் சென்று திரும்பி வரும் அளவுக்கு சமம்.
நமது விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை. நம் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுக்கள் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.
நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் நம் தோலின் மீது பட்டால் ஒரு துளையே உருவாகும். அந்த அளவுக்கு அது காரத்தன்மை நிறைந்தது.
இத்தகைய மனித உடல் மகத்தான செல்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பு என்பதினால்தான் மனிதனை பல செல் உயிரி என்று அழைக்கிறோம்.
அத்தகைய செல்களின் பல்வகை வடிவங்களும், செயல்பாடுகளும் நம்மை மலைக்க வைப்பதாய் இருந்தாலும், அவைகள் சிக்கலான, ஒருங்கிணைந்த வலைப்பின்னல் போல் இயங்குகின்றன. மனித செல்களுடன் ஒப்பிடும்போது, இலட்சோப லட்ச கம்ப்யூட்டர்களையும் அதிவேக டேட்டா கேபிள்களையும் ஒருங்கிணைக்கும் இன்டர்நெட் ஒன்றுமே இல்லை.
செல்களின் செயல்திறன் மிக வேகமானது, அசாதாரணமானது! மனிதன் கண்டுபிடித்த எந்த அதிநவீன தொழில்நுட்பமும், இந்த செல்களோடுகூட போட்டிபோட முடியாது.
சரி, மனித உடலிலுள்ள இந்த செல்கள் எப்படி வந்தன?

Tuesday, July 5, 2022

தன்னியக்கவியல் (Autophagy)

 

தன்னியக்கவியல் (Autophagy)

======================




Book Download Link:- 


தன்னியக்கவியல் (Autophagy) என்றால் என்ன?

புதிய, ஆரோக்கியமான செல்களை உருவாக்கவும், சேதமடைந்த பழைய செல்களை சுத்தம் செய்வதற்காகவும் நம்முடைய உடல் தன்னைத்தானே சரிப்படுத்துகின்ற முறைக்கு “தன்னியக்கவியல்” என்று கூறலாம்.
அதாவது, பல செல்களால் ஆன மனித உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கின்ற புனித முறைக்கு இந்த பெயர் மருத்துவ உலகத்தாரால் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தன்னியக்கவியல் (Autophagy) நவீன அறிவியல் பெயர் என்றாலும், இதை பெயரில்லா பெரியசாமிகளாக இருந்த நம் சித்தர் பெருமக்கள் ஏற்கனவே நம்மிடையே அறிமுகப்படுத்தியுள்ள ‘உண்ணா நோன்பு’ முறை என்பதாகும்.
"ஆட்டோ" என்றால் சுயம் மற்றும் "பேகி" என்றால் சாப்பிடு என்றும்ன் பொருளில் தன்னைத்தானே சாப்பிடும் வழிமுறைக்கு ஆட்டோபேகி என்று அழைக்கின்றனர் இன்றைய நவீன அறிவியல் வல்லுஞர்கள்.
அதாவது, தன்னியக்கத்தின் நேரடி பொருள் "சுய உணவு" என்பதாகும். இதை "சுய விழுங்குதல்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
இது உங்கள் உடலுக்கு ஒருபோதும் நடக்க விரும்பாதது போல் தோன்றினாலும், இது உண்மையில் உங்கள் உடலுக்குள் அனுதினமும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த சுயவிழுங்குதல் மூலமே மனிதன் தன்னைத்தானே புதிப்புத்துக் கொண்டு, ஆரோக்கியத்துடன் ஆனந்தமாக வாழ முடிகின்றது.
இது எப்படி சாத்தியமாகிறது?
நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நமக்கு ஒரு காயம் உண்டாகி விடுகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த காயம் ஏற்பட்ட மேல் தோல், நாளடைவில் கெட்டு விழுந்து விடுகின்றது.
அதன்பிறகு, அதே இடத்தில் நமக்கு புதிய தோல் உண்டாகி இருப்பதை நாம் காண்கிறோம்.
இதிலே என்ன நடைபெற்றது என்று கவனித்தீர்களேயானால், நம்முடைய மேல் தோல் என்பது பல செல்களின் கூட்டமைப்பு என்பதினால், நமக்கு ஏற்பட்ட காயத்தினால் அந்த இடத்தில் இருந்த செல்கள் இறந்துவிட்டன. அதன் பிறகு அந்த இடத்தில் புதிய செல்கள் உண்டாகி விட்டன.
இதிலிருந்து ஒன்று மட்டும் நமக்கு நன்றாகத் தெரிகின்றது.
அதாவது, இறந்த செல்களுக்கு பதிலாக, புதிய செல்களை நம் உடலே உண்டாக்கிக் கொள்ள முடிகிறது என்பதை எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது.
ஏனென்றால், தன்னியக்கவியல் என்பது ஒரு பரிணாம சுய-பாதுகாப்பு செயல் முறையாகும்.
இதன் மூலம் உடல் செயலிழந்த செல்களை அகற்றி, அவற்றின் பாகங்களை செல்லுலார் பழுதுபார்ப்பு மற்றும் சுத்தம் செய்ய மறுசுழற்சி செய்கின்றது.
உடலின் இந்த தன்னியக்கத்தின் நோக்கம் தன் உடலில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, தன்னைத்தானே சுய-ஒழுங்குபடுத்துவதாகும்.
இது எப்படி நம் உடலில் நடைபெறுகிறது?
அதாவது, ஒரு செல் உயிரி அமீபா போன்று, மனிதன்பல செல் உயிரினம் என்பதினால், இவனது உடலின் ஒட்டு மொத்த இயக்கமும் இவன் உண்ணும் உணவினால் ஆற்றலாக மாறி, அதன் காரணமாக அந்த செல்கள் தன்னைத்தானே புதிப்புத்துக் கொண்டு, இறந்த பழைய செல்களையும் தன்னுடைய உணவாக உட்கொண்டு விடுகிறது.
அதாவது மனித உடல் வளர்வதற்கு ஆதாரமாக இருப்பது எது? என்று கேட்டால், அது அவன் உண்ணும் உணவே ஆகும்.
ஆக, உணவினாலேயே உடல் வளர்கிறது.
அந்த உடல் வளர்ச்சியின்போது இறந்த செல்களை, புதியதாக உருவான செல்களே உணவாக உட்கொள்ள வேண்டும் என்றால், மனிதன் வெளியே இருந்து உணவு உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, உண்ணும் அளவறிந்து உண்பதும், தக்க பசி வந்தவுடன் உண்பதும் மட்டுமே, மனிதன் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
ஆகவே, இந்த உடலுக்கு உணவு கொடுக்கும் நேரம் அடிக்கடி என்று இல்லாமல், காலை 8 மணிக்கு பகல் உணவு என்றும், மதியம் 12 – 1 மதிய உணவு என்றும், அத்துடன் இரவு உணவு அவசியம் மாலை 6 மணிக்கு எனவும் எடுத்துக் கொள்ளும் போது, அவனது உடல் ஆரோக்கியத்தை அடைகிறது.
எப்படி?
அதாவது, காலை முதல் மாலை வரை 4 மணி நேர இடைவெளி எடுத்து உணவு உட்கொண்ட மனிதன் அதன் வாயிலாக கிடைத்த ஆற்றலைக் கொண்டு, அனைத்து காரியங்களையும் செய்துவிட்டு, இரவு நேரம் உடல் ஓய்வுக்காக உறங்கச் செல்கிறான்.
இதிலே, மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 8 மணிவரை என 14 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில், இவனது உடலில் உண்டான புதிய செல்கள், வெளி உணவு உள்ளே வராத அந்த குறிப்பிட்ட நேரத்தில் இவனது உடலில் உள்ள இறந்த செல்களையே உணவாக உட்கொள்கின்றன.
இதை இன்றைய நவீன விஞ்ஞான அறிவியல் ஆராய்ந்து வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே, நம் பண்டைய ரிஷிகள் உடலில் ஆரோக்கியம் கருதி, உண்ணா நோன்பு முறையை நமக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
அத்துடன், அவ்வாறுதான் காலையும், இரவும் உணவு உண்ணும் பழக்க வழக்கங்களை வைத்திருந்தனர்.
ஆனால், இன்றைய கல்வி முறையில் உண்டான மாற்றத்தினால், மனிதன் நினைத்த நேரத்திற்கு நிதானமில்லாமல் உணவு உட்கொள்வதும், கண்டதை, கண்படி, கண்ட நேரங்களில் கட்டாயமாக உட்கொள்வதும் இன்றைய நாகரீகம் ஆகி விட்டது.
அதே சமயம், அன்றைய ரிஷிகளாகிய மருத்துவர்கள் அறிவுறுத்திய படி அவசியம் தினமும் இரவு 14 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால், இவனது உடலில் உள்ள இறந்த செல்களை, புதியதாக வந்துள்ள செல்களே உணவாக உட்கொண்டு விடும்.
இதன் காரணமாக, இவனது உடலில் உள்ள செல் கழிவுகள் அகற்றப்பட்டு, அவனது உடல் புத்துணர்ச்சியுடன் புதியதாக ஆரோக்கியத்துடன் கூடியதாக அமைந்துவிடும்.
அதைவிடுத்து, அனாவசியமாக, அனைத்து நேரங்களில் அனைத்து வகை உணவுகளையும் அள்ளி, அள்ளி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் என்றால், எத்தனை நாட்கள் ஆனாலும், அந்த உடலில் உள்ள செல் கழிவுகள் வெளியேறாமல், அவன் உடலிலேயே தங்கி கேன்ஸர் போன்ற கொடிய நோய்க்கு வழி வகுத்துவிடும்.
இதை அறியாத இன்றைய இளைய சமுதாயம் எல்லா நேரங்களிலும் சாப்பிடுகின்றது, எல்லா நேரங்களிலும் உறக்குகின்றது அல்லது ஓடி. ஓடி உழைக்கின்றேன் என்று உடலை வருத்துகின்றது.
இந்த தவறான பழக்க வழக்கங்களினால், இன்றைய மனித சமுதாயம் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, அனைத்து மருத்துவ மனைகளிலும் மல்லுக்கட்டிக் கொண்டு, மருத்துவம் பார்க்க காத்திருக்கின்றது.
இத்தகைய மருத்துவ அவலங்கள் இன்று உண்டானதற்குக் காரணம், மனிதன் மகத்தானவனாக மாற வேண்டியதை விடுத்து, மட்டமானவனாக மாறத் தொடங்கியதின் விளைவு என்றுதான் கூறவேண்டும்.
காரணம்?
ஒழுக்கம் என்றால் என்ன?
என்பதை இன்றைய இளைய சமுதாயம் அறியாமல் இருப்பதுதான், இதற்குக் காரணம் எனலாம்.
அதாவது, நீர் ஒழுக்கு எங்கிருந்து வரும்?
மேலே இருக்கின்ற விட்டத்தில் இருந்துதான் நீர் ஒழுக முடியும். எந்த நிலையிலும், கீழே இருந்து, நீர் சொட்டு, சொட்டாக ஒழுக முடியாது அல்லவா?
அதுப்போன்று, ஒழுக்கம் என்பதும், மேலானவர்களிடமிருந்து சிறிது, சிறிதாக கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு ஆகும்.
ஆனால், இன்றைய இளைய சமுதாயம் எல்லாவற்றையும் கீழானவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.
இதன் காரணமாகத்தான் இந்த இழிவான வாழ்க்கையை இவர்கள் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
எவன் ஒருவன் மேலானவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி, அவைகளை தன்னுடைய வாழ்க்கையில் வழக்கத்துக்கு கொண்டு வந்து, சிறிது, சிறிதாக அவைகளை அனுபவத்திற்கும் கொண்டு வருகிறானோ, அதுவே ஒழுக்கம் என்று கூறப்பட வேண்டும். அதாவது, மேலானவர்களின் வாழ்க்கை முறையை தன் நடைமுறை வாழ்க்கையில் அனுபவமாக்கும் அவனே அனைத்திற்கும் மேலான மனிதனாக உயர்ந்து, மற்றவர்களையும் மகத்தான மனிதனாக மாற்றி வாழ வைக்கின்ற புனிதனாகவும் மாறுகிறான்.
எனவே, இறைவழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளிலும் உண்ணா நோன்பை புகுத்தி, புத்துயிர் பெற்று வாழும் வாழ்க்கை முறையை அனுசரித்து வாழுகின்ற மனிதன், தன் உடலில் உண்டான அந்த புதிய செல்களுக்கு, தன் உடலில் இறந்த பழைய செல்களை உணவாக உட்கொள்ள உதவி செய்கிறான்.
அவனே ஆரோக்கியத்துடன் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இந்த உலகத்திற்கு பல நன்மைகளை செய்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நன்றி! 🙏

Thursday, December 10, 2020

கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்



கறி இலைகள், இந்திய வீடுகளில் காணப்படும் மிகச்சிறந்த நறுமண மூலப்பொருள், எண்ணற்ற ஆரோக்கியத்தையும் சிகிச்சை நன்மைகளையும் கொண்டுள்ளது.
இது இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பூர்வீகமாக இருக்கும் இந்த மரம் இந்தி மொழியில் கடி பட்டா அல்லது மீதா வேம்பு, தமிழில் கரிவேப்பலை, தமிழில் கரிவேபாகு அல்லது மலையாளத்தில் கரிவெம்பு போன்ற பல வடமொழி பெயர்களால் அறியப்படுகிறது.
காரி என்று பொருள்படும் “கரி” என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, கறிவேப்பிலை கி.பி 4 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பண்டைய தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கறி மரம், ஒரு துணை வெப்பமண்டல மரமாக 4-6 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து, நடுத்தர அளவிலான தண்டு வைத்திருப்பது முறயா கொயிங்கீ என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகின்றது.
நறுமண கறிவேப்பிலை இலைகள் மரத்தின் கிளைகளில் ஜோடிகளாகவே காணப்படுகின்றன.
இந்த கறிவேப்பிலை மரங்களில் சிறிய வெள்ளை நிற பூக்களைக் கொண்டு மகரந்தச் சேர்க்கை செய்கின்றன, மேலும் விதைகள் மூலம் சிறிய, கருப்பு, பளபளப்பான உருண்டை வடிவ பழங்களை உற்பத்தி செய்கிறது.
பழங்கள் சதைப்பற்றுள்ளவை மற்றும் உண்ணக்கூடியவை என்றாலும், பூ அல்லது பழங்கள் சமையல் நோக்கங்களுக்காக பயன் படுத்தப்படுவதில்லை.
கறிவேப்பிலை அமிலத்தன்மையுடன் கூடிய, ஒரு தனித்துவமான கசப்பான சுவை கொண்டது. இலைகள் உணவுகளில் அவற்றின் நறுமண சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், உணவின் ஆரோக்கிய நன்மைகளையும் மேம்படுத்துகின்றன.
நீரிழிவு, வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் பாரம்பரிய சீன சிகிச்சைகள் போன்ற பல முழுமையான சிகிச்சையில் இந்த கறிவேப்பிலை பயன் படுகின்றன.
கறிவேப்பிலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு நீரிழிவு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது. இந்த கறிவேப்பிலை இலைகள் நீரிழிவு நோய்க்கு அருமையான மருந்து. அத்துடன், பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் கோளாறுகளுக்கு எதிராக சக்திவாய்ந்தவை.
நவீன இராசயண பற்பசை வருவதற்கு முன்பு, ஆரம்ப காலங்களில், கறிவேப்பிலை கிளைகள் நல்ல வாய்வழி சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு வகித்தன.
ஆலமரம் மற்றும் கருவேப்பிலை மரங்களின் சிறு கிளைகள் பற்களை துலக்கும் குச்சிகளாகப் பயன்பட்டன.
இதனையே, நம் முன்னோர்கள் “ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி!” என்று அழைத்தனர்.
அதாவது இதன் மெல்லிய கிளைகள் அல்லது கிளைகள் பற்களை சுத்தம் செய்வதற்கும், பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்துவதற்கும், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் காற்றில் பரவும் நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாப்பதற்கும் ஒரு இயற்கை மூலிகைகளாகவும், பற்களின் தூரிகையாகவும் (Tooth Brush) பயன் பட்டன.
நவீன ஆயுர்வேத, சித்தா சிகிச்சையில் இன்றைய நாட்களில் இலைகளின் தூள் அல்லது மூல இலைகள் நல்ல வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பற்பொடிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
உடல் எடை குறைக்கவும் இந்த கறிவேப்பிலை இலைகள் முக்கிய பங்கு வகுக்கின்றன. இலைகளை பச்சையாக சாப்பிடும்போது அல்லது சாற்றாக உட்கொள்ளும்போது, உடலை சுத்தப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் கூடிய அற்புதமான மூலிகையாக இந்த கறிவேப்பிலை இருக்கின்றது.
வீட்டில் கறிவேப்பிலை இலை சாறு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
========================
30-40 புதிதாக பறித்த கறிவேப்பிலை இலைகள். இத்துடன் 10-15 உலர்ந்த புதினா இலைகள் 3 கப் தண்ணீர், 3 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், 2 டீஸ்பூன் தேன் அவசியமாகின்றது.

செய் முறை:-
----------------
ஒரு கனமான பாத்திரத்தில் 500 மில்லி லிட்டர் தண்ணீரை எடுத்து சூடாக்க வேண்டும். இதில் கறிவேப்பிலை, புதினா இலைகள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அதன் பிறகு அது 250 மில்லி லிட்டராக நீர் சுண்டி குறைந்தவுடன், அந்த கொதிக்க வைத்த இலைகள் போட்ட கொதி நீரை, மற்றொரு சுத்தமான பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது தேன் சேர்த்து மிதமான சூடு இருக்கும் பொழுதே தேநீர் (Tea) போன்று குடிக்கலாம்.
எந்தவொரு அசுத்தங்களையும் கடினமான துகள்களையும் அகற்ற சுடரைத் தள்ளிவிட்டு, முழு கலவையையும் வடிகட்டவும்.

கறிவேப்பிலைச்சாற்றின் நன்மைகள்
-----------------------------------------------------------

எடை இழப்புக்கும், முடி உதிர்வதை தடுக்கவும், தோல் மெருகேற்றவும் என பல வகைகளில் இந்த கறிவேப்பிலைச் சாறு பயன் படுகின்றது.

கறிவேப்பிலை:யின் நமைகள்:
----------------------------------------------
கார்போஹைட்ரேட், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், மல்டிவைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்தின் நண்பன்.
இது இரத்த சோகை, நீரிழிவு, அஜீரணம், உடல் பருமன், சிறுநீரக பிரச்சினைகள், முடி மற்றும் தோல் பிரச்சினைகள் போன்றவைகளின் சிகிச்சைக்கு பெரும் பங்கு வகிக்கின்றது.
அத்துடன், அத்தியாவசிய வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர் மற்றும் ஆவியாகும் எண்ணெய்கள் நிறைந்த கறி இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில், இதய பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில், தொற்றுநோய்களைத் தடுப்பதில் மற்றும் அழகான முடி மற்றும் சருமத்தை வழங்குவதில் சிறப்பானது ஆகும்.

புதினா இலைகள்:
----------------------------
புதினா இலைகளில் மென்தால் இருப்பது சருமத்தை பாதுகாக்கும். உடலுக்கு இயற்கையான குளிரூட்டியாக செயல்படுகிறது, வயிற்று அஜீரணத்திற்கு உதவுகிறது.
இருமல் மற்றும் சளி போன்ற தொற்றுநோய்களுக்கு எதிராக இது பயனுள்ளதாக இருக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கிறது, குமட்டலைத் தடுக்கிறது மற்றும் தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும் என்பதை நிரூபித்துள்ளது.

எலுமிச்சை:
------------------
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த வளமான கனியாகும். இதுவும் உடல் எடை குறைப்புக்கு ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருள். இதுவும் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது, உங்கள் உடலில் உருவாகும் சிறுநீரக கற்களிலிருந்து விடுதலை அளிக்கின்றது. அத்துடன், ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கு இந்த எலுமிச்சையும் மிகவும் நன்மை பயக்கும்.

இலவங்கப்பட்டை:
----------------------------
கறிவேப்பிலை சாற்றில் இலவங்கப்பட்டை சேர்ப்பது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது, இதுவும் உடல் எடை குறைக்கும் செயல் முறையை தூண்டுகின்றது.
மேலும், இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தது, மற்றும் செரிமான பிரச்சினைகளை மேம்படுத்துகிறது. இது மூச்சுக்குழாய் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

தேன்:
----------
தேன் ஒரு மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள். அது பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாகப் பயன் படும். இது உடல் வலியையும், எடை குறைப்பையும் உண்டாக்கும். இந்த தேனுடன், சிறிது எலுமிச்சை சாற்றைக் கொண்டு, இவைகள் இரண்டையும் ஒன்றாக வெந்நீரில் கலந்து, காலையில் உணவுக்கு முன்பாக வெறும் வயிற்றில் குடிப்பவர்களுக்கு உடல் எடையைக் குறைக்கின்றது. உடல் வலியை நீக்குகிறது, தொற்றுநோய்களுடன் போராடுகிறது, குறைக்கிறது.

100 கறிவேப்பிலை இலைகளும், அதன் ஊட்டச்சத்து விபரமும்.
--------------------------------------------------------------------------------------------------
ஆற்றல் - 108 கிலோகலோரி
புரதம் - 6.1 கிராம்
ஃபைபர் - 6.4 கிராம்
பாஸ்பரஸ் - 57 மி.கி.
கால்சியம் - 830 மி.கி.
இரும்பு - 0.93 மிகி
மெக்னீசியம் - 44 மி.கி.
கரோட்டின் - 7560 µg
ரிபோஃப்ளேவின் - 0.210 மி.கி.
நியாசின் - 2.3 மி.கி.
வைட்டமின் - சி 4 மி.கி.
ஃபோலிக் அமிலம் - 23.5 µg.

1. நார்ச்சத்து அதிகம்:
--------------------------------
கறிவேப்பிலை நார்ச்சத்து மிக்க மூலிகையாகும். இது வயிறு செரிமானத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது. இத்துடன் வழக்கமான குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.
வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலுக்கு சிகிச்சையளிக்க இது உதவியாக இருக்குறது, மேலும் உடலில் உள்ள இரத்த குளுக்கோஸ் அளவையும் வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது.

2. புரதங்களுடன் ஏற்றப்பட்டது:
-----------------------------------------------
கறிவேப்பிலையில் அதிக அளவு புரதங்கள் உள்ளன, அவை உடலின் கட்டுமான தொகுதிகளாக கருதப்படுகின்றன. இது உடலின் சரியான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கியமானது மற்றும் நமது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

3. கால்சியத்தின் காவலன்:
----------------------------------------
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கால்சியம் மிக முக்கிய பங்கு வகுகின்றது. அதன் முக்கியத்துவத்திற்கு இந்த கறிவேப்பிலை கால்சியத்தின் சக்தியாக இருப்பதால், கறிவேப்பிலை பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோமலாசியா போன்ற நோய்களைத் தடுக்கவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

4. பாஸ்பரஸில் பணக்காரர்:
------------------------------------------
கறிவேப்பிலையில் முக்கிய ஊட்டச்சத்துக்களில் பாஸ்பரஸ் என்பதும் ஒன்றாக இருப்பதால், பாஸ்பரஸ் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது.
இது நமது இதயத் துடிப்பை பராமரிக்கிறது, உடற்பயிற்சியின் பின்னர் வருகின்ற வலி தசை பிடிப்பைக் குறைக்கிறது மற்றும் பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. செல்லுலார் மட்டத்தில், செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்கவும் பாஸ்பரஸ் பயன்படுத்தப்படுகிறது.

5. கறிவேப்பிலையில் இருந்து எண்ணெய்:
--------------------------------------------------------
தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தவிர, கறிவேப்பிலை இலைகள் α- பினீன், சபினீன், β- பினீன், α- டெர்பினீன் போன்ற பல கொந்தளிப்பான அத்தியாவசிய எண்ணெய்களுக்கு ஒரு சக்தியாகும்.
இந்த கறிவேப்பிலை எண்ணெய்களில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு கொண்டது. இத்துடன் முடி, தோல் மற்றும் வாய்வழி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் எண்ணையாகவும், முடி வளர பயனுள்ள எண்ணையாகவும் இது பயன் படுகின்றது.

நோய்களில் முக்கிய பங்கு
========================

1. நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கறிவேப்பிலை இலைகளின் சாறு இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்து, கணையத்தை இன்சுலின் உற்பத்திக்கு தூண்டுகின்றது. கறிவேப்பிலை நுகர்வு நம்முடைய மூச்சுக்குழலையும், நுரையீரலையும் சீராக இயங்க வைத்து நம்மை சுறுசுறுப்பாகிறது.
இது நாசிப் பகுதியிலிருந்து சளி மற்றும் வாத வைப்புகளை அழிக்க உதவுகிறது மற்றும் மார்பு இருக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உலர்ந்த, எரிச்சலூட்டும் தொண்டைக்கு சிகிச்சையளிப்பதில் இந்த இலையின் இனிமையான தன்மை ஒரு மிகச்சிறந்த பங்கை வகிக்கிறது.
இது சைனஸ், தலைவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றுக்கான ஒரு சிறந்த தீர்வாகவும் செயல்படுகிறது. மேலும், இது இரத்தத்தில் கலந்துள்ள குளுக்கோஸ் அளவினை சமன்படுத்துகின்றது.

2. இரத்த சோகையைத் தடுக்கிறது:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உடலில் இரும்புச்சத்து குறைபாடு. இரத்த சோகைக்கு அருமையான மருந்து. இரும்புச்சத்து அதிக அளவில் உள்ள கறிவேப்பிலை இரத்தத்தின் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது இயற்கையான இரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது, சோர்வு மற்றும் சோர்வு அறிகுறிகளை நீக்கி, நோய்த்தொற்றுகள் தோன்றாதவாறு தற்காத்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
அந்த வகையிலே, ‘உணவே மருந்து’ என்பதில் இது சரியாகவும் உள்ளது.

3. பார்வைக்கு நல்லது:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வைட்டமின் ஏ மற்றும் β - கரோட்டின் ஆகியவைகள் கறிவேப்பிலையில் ஏராளமாக இருப்பதினால், இது கண்பார்வை மேம்படுத்துவதற்கும் கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கண்களின் கார்னியா வறண்டு போவதையும், கண்களுக்கு முன்னால் கண்புரை உருவாவதையும் தடுக்கிறது, இதனால் ஜெரோபால்மியா மற்றும் இரவு குருட்டுத்தன்மைக்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைகின்றன.

4. நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கறிவேப்பிலை சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே கறிவேப்பிலை வழக்கமாக தினமும் உணவில் உட்கொள்வது நம் உடலை பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.

5. எடை இழப்புக்கான வரம்:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எடை இழப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் கறிவேப்பிலை இலைகள் மக்களால் ஒரு வரமாக கருதப்படுகின்றன.
இலைகளில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் இருப்பது எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொழுப்பை (அதாவது கெட்ட கொழுப்பை) குறைக்கிறது. இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை கழுவி அதிகப்படியான கொழுப்பை எரிக்கிறது.

6. செரிமானத்தில் உதவி:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இலைகளில் உள்ள நார்ச்சத்தின் அதிக உள்ளடக்கம் பல இரைப்பை குடல் தொல்லைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கறிவேப்பிலையின் கார்மினேடிவ், செரிமான, ஆண்டிமெடிக் மற்றும் டைசென்டெரிக் பண்புகள் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குமட்டல், வீக்கம் போன்றவற்றையும் தடுக்கிறது. இது இயற்கையான தூண்டுதலாக இருப்பதால், பசியை நன்கு அதிகரிக்கின்றது.

7. புற்றுநோயைத் தடுக்கிறது:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பினோல்கள் மற்றும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் இருப்பது புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மற்றும் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையிலே, இந்த கறிவேப்பிலை புற்று நோய்க்கும் சிறந்த மருந்து எனலாம்.

8. பல் பராமரிப்பு:
^^^^^^^^^^^^^^^^^^
கறிவேப்பிலை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்பதினால், அவை நல்ல வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
இலைகளில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள் ஈறு மற்றும் பற்களை வலுப்படுத்துகின்றன, வாய் துர்நாற்றத்தை நீக்குகின்றன மற்றும் பற்களையும், ஈறுகளையும் எந்த நுண்ணுயிரிகளும் தாக்காதவாறு தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றன.

9. அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துகிறது
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நீண்ட காலத்திற்கு முன்பே இந்த வலிமையான இலைகள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க ஒரு பாரம்பரிய தீர்வை வழங்குகின்றன.
பயோ ஆக்டிவ் கூறுகளின் இருப்பு, நினைவகத்தை அதிகரிக்கத் தேவையான குளுதாதயோன் ரிடக்டேஸ் (ஜிஆர்டி), குளுதாதயோன் பெராக்ஸிடேஸ் (ஜிபிஎக்ஸ்) மற்றும் சூப்பர் ஆக்ஸைடு டிஸ்முடேஸ் (எஸ்ஓடி) உள்ளிட்ட மூளை இரசாயனங்கள் உறைவதைத் தடுக்கிறது.
எனவே, இந்த கறிவேப்பிலை இலைகள் ஒரு நபரின் நினைவக திறன், கவனம், செறிவு, அமைதி, விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
இது ஒரு சக்திவாய்ந்த மூளை டானிக் மற்றும் தூண்டுதலாக இருப்பதால், மக்கள் தங்கள் அன்றாட உணவில் கறிவேப்பிலை இலைகளை சேர்க்காமல் சமையல் செய்ய மாட்டார்கள்.
இதனால் அல்சைமர் என்ற மறதி நோய் மற்றும் முதுமை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமையான தீர்வாக இந்த கறிவேப்பிலை இலைகள் இருப்பதினால், நீங்கள் ஒருபோதும் இலைகளை உணவிலிருந்து தூக்கி தூரம் எறியக் கூடாது.
நன்றி! 🙏

Monday, December 7, 2020

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிசய சூரணம்


இந்த சூரணம் செரிமானம் மற்றும் எளிதாக மலம் கழிக்க மிகச் சிறந்த மருந்து எனலாம்.

இது இரைப்பைக் குழாயில் உள்ள அமிலச் சுரப்பை நடுநிலையாக்குகிறது மற்றும் செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, இந்தச் சூரணம் குடலில் உள்ள தந்துகளின் வாயிலாக உணவின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் புண்கள் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது மிகவும் நன்மை பயக்கும் சூரணமாகும்.
இந்த சூரணம் செய்யத் தேவையான பொருட்கள்:
--------------------------------------------------------------------
உலர்ந்த பெரிய நெல்லிக்காய், கடுக்காய், ஜாதிக்காய், கற்கண்டு, கருப்பு மிளகு, ஏலக்காய், கிராம்பு, சுக்கு, மற்றும் வாய்விலங்கம் ஆகிய மூலிகைகளை நாட்டு மருந்துக் கடைகளில் தலா 50 கிராம் என வாங்கிக் கொண்டு அதனை வெயிலில் ஒரு நாள் நன்கு உலர்த்தி, ஈரமில்லாமல் எடுத்து மிக்ஷியில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
[குறிப்பு:- கடுக்காயை மட்டும் மிக்‌ஷியில் போடுவதற்கு முன்பாக அதனை சிறு சுத்தியலில் மேல் தோலை மட்டும் உடைத்து எடுத்துக் கொண்டு, உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விடவும். கடுக்காயில் கொட்டையைப் பயன் படுத்தவேண்டாம்.]
அதன் பிறகு அதனை ஒரு சல்லடையில் சலித்து எடுத்து, காற்று புகாத கண்ணாடி ஜாடியில் அல்லது பீங்கான் சாடியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.


சூரணத்தின் பயன்பாடு:
^^^^^^^^^^^^^^^^^
இந்த சூரணத்தை தினமும் இரண்டு வேளைகள் உணவுக்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து வெதுவெதுப்பான வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது தேங்காய் நீர் மற்றும் இளநீர் என இதில் ஏதாவது ஒன்றிலும் கலந்து குடிக்கலாம்.
நீரில் கலந்து குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் நல்ல தேனில் குழைத்து உண்ணலாம்.
இது நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்களை குடலில் உள்ள குடல் உறிஞ்சிகள் மூலமாக எடுத்துக் கொள்ளத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றது.
இந்தச் சூரணம் வயிறு சம்பந்தமான உபாதகளை எளிதில் போக்கி, உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகின்றது.
அதாவது, அடிக்கடி வயிற்று வலி, கடுமையான குடல் பிரச்சினைகள் மற்றும் வய்று எரியும் உணர்வுக்கு வழிவகுக்கும் குடல் இரைப்பை அழற்சி போன்றவைகளை குணப்படுத்துகின்றது.
இந்த இறைப்பை அழற்சியினால் உண்டாகும் அதிகப்படியான அமிலம் சுரத்தல், அஜீரணம், வயிற்றுப் பொருமல், வாயு உப்பிசம், வயிற்றில் கடமுடா சத்தம், அடிக்கடி ஏப்பம் மற்றும் சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனைகள் போன்ற அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளையும் இந்த சூரணம் சரி செய்கின்றது.
இந்த சூரணத்தை 21 நாட்கள் தொடர்ந்து இருவேளைகள் காலையும் , மாலையும் உணவுக்கு முன்பாக உட்கொண்டு வர, குடலில் இருந்து அதிகப்படியான அமிலத்தை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இத்துடன், இன்னும் சிலருக்கு குடல் வீங்கிய மோசமான திசு அடுக்குகளை திறம்பட சரி செய்து, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD - Gastroesophageal reflux disease) என்பது வயிற்றில் இருந்து அமிலம் பின் வாங்குவதன் மூலமாக உண்டாகும் உணவுக்குழாய் எரிச்சல், நெஞ்செரிச்சல், உண்டது எதுக்களித்தல், வாய்வு உப்பிசம் போன்ற பல்வேறு வயிறு பிரச்சனைகளை போக்கக் கூடிய அருமையான சூரணம் ஆகும்.
வயிற்றின் உட்புறத்தில் சுரக்கும் இந்த அமிலத்தால் வயிற்றுப் புண், நெஞ்செரிச்சல், மூச்சடைத்தல், காரம் தொண்டையில் ஏறுதல், நீர், மற்றும் உணவை எளிதாக உண்ண முடியாமல் அடைக்கின்ற சிரமம், வயிற்று எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் கொண்ட ஒரு மோசமான நோய் என்பதைத்தான் ஆங்கில மருத்துவம் GERD என்கின்றது.
உணவுக்குழாய் என்பது நமது இதயத்தின் பின்னால் உள்ளது என்பதினால், இந்த நெஞ்செரிச்சல் சில நேரங்களில் இதய உபாதகள் போன்றும் காணப்படும்.
ஆகவே, இரைப்பை உணவுக் குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறிலிருந்து இந்த சூரணம் வயிற்றைக் காக்கின்றது.
மேலும் இதே சூரணம் சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உண்டாகாமல், சிறு நீர் உப்புக்களை அகற்றுவதில் சாதகமாகவும், மற்றும் கால்சியம், ஆக்சலேட்டுகள் போன்ற சிறுநீர் உப்புகளை முழுவதுமாக அகற்றவும் உதவுகின்றது.
இத்துடன், சிறுநீரக குழாய்கள் மற்றும் அதற்கு இடையில் உள்ள திசுக்களின் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அதி அற்புதமான சூரணம் என்றால் அது மிகையாகாது.
நன்றி! 🙏

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...