Monday, August 13, 2012

தேங்காய் எண்ணெய் மகத்துவம்

1960- ல் உலகெங்கும் ஆட்சியில் இருந்தது தேங்காய் எண்ணெயும் ஆலிவ் எண்ணெயும் மட்டுமே. தென் கிழக்கு ஆசிய நாடுகள்,தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் போன்றவற்றில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான சமையல் எண்ணெய். 

 ஐரோப்பாவில் மட்டும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. அப்போது Saturated fat இதய நாடிகளில் கொழுப்பை சேர்த்துவிடும் என்ற செய்தியை அவசரமாக மருத்துவ ஏடுகளும், சாமனியன் படிக்கும் அத்தனை இதழ்களும் வேக வேகமாக எழுதத் துவங்க, தேங்காய் எண்ணெயின் ஆளுமை உலகெங்கும் குறையத் துவங்கி, இன்றளவில்,தேங்காய் பிள்ளையாருக்குத் தவிர, எவரும் அஞ்சும் பொருளாகி விட்டது. 

ஆனால்,’கொழுப்பு’ என்ற பயமுறுத்தலுக்குப் பின்னால் மிகப் பெரிய வணிகப் போட்டி இருந்தது, இப்போது தான் கசியத் துவங்கி உள்ளது. சூரிய காந்தி எண்ணெயை உலகெங்கும் வணிகப்படுத்துவதற்காக, நம்மில் பெரும் பயன்பாட்டில் இருந்த கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயின் இடங்களைக் காலி செய்ய, அமெரிக்க அரசாங்கம் செய்த கூட்டுச் சதியோ? என பல்வேறு நாட்டு அறிஞர்களும் இன்று யோசிக்கத் துவங்கி உள்ளனர். 

’கொழுப்பு’  குறித்த அச்சம் இல்லாத குடும்பம் இன்று இல்லை என்றே சொல்லலாம். கொலஸ்டிரால் தாவர கொழுப்புகளில் நேரடியாக கிடையாது. நமது இரத்தக் குழாய்களின் உட்சுவர்களில் கீறல், புண்கள் ஏற்படுகையில், அதை சரி செய்யும் சிமெண்ட் போன்ற பணி தான் கொலஸ்டிரால் செய்வது.(சுவர்களில் நாம் பட்டி பார்த்து பெயிண்ட் அடிப்போமே அது போல)..தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு பொருளும் அதைத்தான் செய்யும்.

முதலில் saturated fat வேண்டாம் என்றும், அதிகம் poly unsaturated fat தான் நல்லது என்றும் சொன்னவர்கள் தற்போது mono unsaturated / poly unsaturated விகிதம் தான் முக்கியம் என்கிறார்கள். கூடுதலாய் ஒமெகா அமிலம் அளவும் தற்போது பேசப் படுகிறது. இது போன்ற மாற்றம் மட்டுமே மேற்கத்திய அவசர அறிவியலில் நிரந்தரம்.

தேங்காய் எண்ணெயோ அல்லது நல்லெண்ணையோ இரத்தக் குழாய் அடைப்பை நேரடியாக உருவாக்குவதில்லை. நமது மன உளைச்சல், தினம் உடலில் சேரும் மாசுக்கள், partially hydrogenated Trans fat (ஃபாஸ்ட் ஃபுட் தான் ட்ரான்ஸ் ஃபேட்டை அதிகம் நமக்கு அளிப்பது) என பல்வேறு காரணங்கள் தான் இரத்தக் குழாய் அடைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 சமீபத்திய உண்மைத் தகவல் :
கென்யா நாட்டைச் சேர்ந்த மரியம் என்ற பெண்மணி எய்ட்ஸ் ( HIV )  நோயால் பாதிக்கப்பட்டவர் தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பால் தினமும் சாப்பிட்டு குணமடைந்துள்ளார். தேங்காய் எண்ணெய்க்கு நோய்கிருமிகளை அழிக்கும் திறன் உள்ளது என்று அனுபவத்தில் உணர்ந்த மரியம் ஒரு நான்கு வயது சிறுவனுக்கு முகம், கைகள், தலை ஆகியவை ஒருவிதமான நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. தேங்காயை கூழாகச் செய்து அந்தப் பையனின் உடம்பு முழுவதும் தினமும் ஒருவார கால அளவிற்க்கு பூசப்பட்டது. அந்தச் சிறுவன் அந்த நோயிலிருந்து அதிசயத்தக்க வகையில் முற்றிலும் குணமடைந்துவிட்டான்.

ஆதாரம் : 1) ஹெல்த்தி வேஸ் நியூஸ் லெட்டர்
            தொகுதி எண்,9, இதழ் எண் 1

         2) இண்டியன் கோக்கனட் ஜர்னல்
            தொகுதி எண் 9, இதழ் எண் 9

நன்றி :- கென்யா நிகழ்ச்சி பற்றி இந்தியத்தென்னை இதழ் ஜனவரி-மார்ச் 2012 இதழில் பிரசுரமாகியிருந்தது.

இன்னும் கூடுதலாக, சமீபத்திய ஆய்வுகள், இதய அடைப்பு உருவாகக் காரணியாகக் கருதப்படும் சில நுண்கிருமிகளைக் கூட கொல்லும் இயல்பு உடையது தேங்காய் எண்ணைய் என்கிறது. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் உடல் தேற, அவை 5-6 மாதத்தில் பால்-அரிசி கஞ்சிக்கு மாறும் பருவத்தில் தேங்காய் எண்ணெய் துளிகள் சேர்த்து கொடுக்க எடை உயர்வும், நோய் எதிர்ப்பாற்றல் உயர்வும் பெருகும்.
எந்த ஒரு புண்ணுக்கும், அதில் தொற்று ஏறாமல் இருக்க, பூஞ்சை வராதிருக்க தேங்காய் எண்ணெய் பூச்சு பெரிதும் உதவும். இப்படி மருத்துவ குணமும் உணவு திறனும் கொண்ட்து தேங்காய் எண்ணெய் ஆகும்.


லாரிக் அமிலம் என்ற அமிலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் ஒரு மிகச் சிறந்த பொருள். இது உலகில் இடம் பெற்றுள்ள இரு பொருட்கள் தாய்ப்பாலும், தேங்காய் எண்ணயும் மட்டுமே. மோனோலாரின் என்ற பொருளை தேங்காய் எண்ணெயில் இருந்து பிரித்தடுத்து காப்புரிமையும் பெற்று சந்தை படுத்தியும் வருகின்றன, அமெரிக்க வணிக நிறுவனங்கள்.ஆனால், நாமோ தேங்காய் எண்ணெயைக் கண்டாலே அலறத் துவங்கியுள்ளோம். மேலும் நம்முடைய தாய் மொழியில் இதைப்பற்றியெல்லாம் கூறினால் நாம் ஏற்றுக்கொள்ளும் மன நிலையை இழந்து விட்டோம், வெளிநாட்டினர் ஆங்கில மொழியில் தெரிவித்தால் அதனை உடனே ஏற்றுக்கொள்கிறோம். அப்படியுள்ளது நம் நிலை?.சிந்திக்க!.....

அரிசித் தவிட்டு எண்ணெய் : இன்று உலகளவில் அங்கீகரிக்கபப்ட்டு வரும் அற்புத எண்ணெய்., இதயத்திற்கு நலம் பயக்கும் பாலிஃபினால் ஆன, Oraizinol சத்து நிறைந்து உள்ள தவிட்டு எண்ணெய். நம் சமையலுக்கேற்ற,உடல் நல்த்துக்கேற்ற எண்ணெய் அது..பெருமளவில், குறைந்த செலவில் நம் நாட்டை ஆள வேண்டிய எண்ணெய் அரிசி தவிட்டு எண்ணைய் ஆகும்.

எள் தரும் எண்ணெய் நல்லெண்ணெய் : குடல் புண்ணை ஆற்றும். குமரிப்பெண்ணின் கருப்பையையும் காக்கும். உளுந்தங்களியுடன் நல்லெண்ணெய் சேர்த்து வழங்கும் போது, மாத விடாயின் வலி நீங்கும். சிறு குழந்தைகளுக்கு கரிசாலை சாறு சேர்த்து நல்லெண்ணெயில் காய்ச்சி கொடுக்க இருமல் நீங்கும்.

குறைந்த அளவில் எண்ணெய் எடுப்பது அவசியம்.தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய் சிறிய அளவில் உணவில் சேர்ப்பது நம்மை இதய நோயில் இருந்தும் இன்னும் பல நோயில் இருந்தும் காக்கச் செய்யும். கலோரிக் கணக்கு மட்டும் பார்த்து எண்ணெயைப் பழிப்பது முட்டாள் தனம். வீட்டுப் பெரியவர்களின் அவசர முடிவால், பல வீடுகளில் இன்று இளைஞர்களும் குழந்தைகளும் எண்ணெய்த் தவிர்ப்பை நாகரீகமாகப் பேசுவது நல்லதல்ல. எண்ணெயில் பொரித்த உணவுகள் ட்ரான்ஸ் கொழுப்பை உருவாகிடும் ஆதலால், அதை தவிர்க்கச் சொல்கின்றன்ர்,இன்றைய அறிவியலாளர்.

அளவுக்கதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை நாம் மறவாதிருந்தால் போதும்.கலவை எண்ணெய்கள் (தவிட்டு எண்ணெய், நல்லெண்ணேய்,தேங்காயெண்ணெய்-இவற்றின் கலவை) இதயத்திற்கு நல்லது.

தானியத்தின் விதை, அதன் மரபு, அது விளைந்த நிலம், விளைவிக்கப் பட்ட விதம், விளைந்தபின் உணவாய் தயாரிக்கப்பட்ட விதம் என எதுவுமே அறியாமல், வண்ணத்தொலைக்காட்சியில்,பிடித்த நடிகரோ விளையாட்டு வீரரோ கோடிகளுக்காக நடிக்கும் வசனத்தில் நம்பிக்கை வைத்து, நம் வீட்டுப் பிள்ளகளும், பல நேரங்களில் நாமும் தயார் உணவுகளையும், தின்பண்டங்களையும் நாடுவதைக் காட்டிலும், நம் பாட்டி சொல்லி தந்து விட்டுப் போன பொரிவிளங்காய், மாலாடு, கடலை உருண்டை எவ்வளவோ மேல்..!

Monday, August 6, 2012

கொள்ளுப்பால்

உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.
 
100  கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

நன்கு முளைவிட்ட கொள்ளுவை சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

பெண்களுக்கு மாத விலக்கு பிரச்சனை





1.       எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.


2.       கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

3.       கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் எடுத்து பொடித்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 கிராம் பொடியை போட்டு கொதிக்க விட்டு கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் நிற்கும்.

4.       கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

5.       கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

6.       கீழாநெல்லி வேரை இடித்து சாறு பிழிந்து, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

7.       கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.

உணவே மருந்து


 
1.       கொத்தமல்லி கீரை -    மூளை,மூக்கு சம்பந்தமான சகல
                                                         வியாதியையும் குணமாக்கும்.                                                            

2.       செவ்வாழைப்பழம் -    கல்லீரல் வீக்கம், மூத்திரவியாதியை
                                                       குணமாக்கும்.

3.       பச்சை வாழைப்பழம் -    உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்

4.       ரஸ்தாளி வாழைப்பழம் -    கண் மற்றும் உடலுக்கு வழுவை தரும்.

5.       பேயன் வாழைப்பழம் -    வெப்பத்தைக் குறைக்கும்.

6.       கற்பூர வாழை -    கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.

7.       நாவல்பழம் -    நீரிழிவை நீக்கும்.

8.       நேந்திரம் பழம்  -    இரும்புச் சத்தினை உடலுக்குக் கொடுக்கும்.

9.       கொய்யா -    சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு நல்லது.

10.   பப்பாளி -    மூல வியாதிகாரர்களுக்கு நல்லது.

11.   மாம்பழம் -    ரத்த அழுத்தம் சீராகும்.

12.   ஆப்பிள் -    மலச்சிக்கலை போக்கும்.

13.   திராட்சை -    இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

14.   எலுமிச்சை -    மலச்சிக்கலை போக்கும்.

15.   செர்ரி -    கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

16.   மாதுளம்பழச்சாறு - பால் சேர்த்து குடிக்க இரும்பு சத்து கிடைக்கும

17.   கேழ்வரகு -    கேழ்வரகு கூழ் செய்து பருகினால் பித்தம் தணியும்                                                 

18.   வெந்தயம் -    கல்லீரல்வீக்கம், இருமல், வயிற்றுவலி
                                     குணமாகும். மற்றும் இரவில் நீரில்
                                     ஊறவைத்து காலையில் உண்டால் உடல் பருக்கும்.

19.   இஞ்சி -    மென்று தின்றால் குரல்கம்மல் சரியாகி விடும்.


20.   சின்ன வெங்காயம் -    பசுவெண்ணையுடன் கலந்து சாப்பிட   
                                                       மூல வியாதி குணமாகும்.

21.   பூண்டு -   பூண்டை சுட்டு சாப்பிட்டு நீர் குடித்தால்
                           இருதய நோய்க்கு நல்லது.

22.   வாழைப்பூ -    விந்துவை அதிகரிக்கச் செய்யும் மற்றும்
                                    சீதபேதி, ரத்த மூலம் கட்டுப்படுத்தும்.

23.   நெல்லிக்கனி -    உடல் அசதியைப் போக்கி உடலுக்கு
                                           புத்துணர்ச்சியை அளிக்கும்.

24.   மிளகு -    பூச்சிகடிகளுக்கு மிளகு சாப்பிடுவதால்               
                            உடலில் உள்ள நஞ்சு அழிந்து விடும்.

25.   முள்ளங்கி -    கபம், இருமல் ஆகியவை தீரும்.

Sunday, August 5, 2012

இயற்கை மூலிகையும் குணமாகும் நோய்களும்




மருந்தின் பெயர்                    தீரும் நோய்கள்

1. அருகம்புல் - வாத, பித்த கபத்திற்க்கு ஏற்றது.

2. தூதுவளை - நாள்பட்ட இளைப்பு இருமல்

3. கடுக்காய்  - மலச்சிக்கல், வாய்வு

4. நெல்லிக்கனி - வைட்டமின் சி சத்து.

5. வல்லாரை - ஞாபகசக்தி, நரம்பு ஊக்கம்.

6. வில்வம் - பித்தம், வாந்தி, மயக்கம்

7. முடக்கத்தான் - மூட்டுவலி, தசைவலி

8. வாழைத்தண்டு - சிறுநீரகக் கோளாறு

9. வாதநாராயணன் - வாத வலிகளுக்கு

10. பொன்னாங்கண்னி - கண்பார்வைக்கு

11. மஞ்சள் கரிசாலை - உடல்நலம்

12. கீழாநெல்லி - இரத்தசோகை, மஞ்சள்காமாலை

13. நெருஞ்சி - எல்லாவிதமான மூத்திரவியாதி

14. அத்திக்கீரை - அல்சர்,குடற்புண்

15. அகத்திக்கீரை - இரத்த அழுத்தத்துக்கு

16. ஓரிதழ் தாமரை - இரத்த விருத்தி

17. ஆடாதோடை - காசம், இளைப்பு, கபம்

18. நாவல் - மதுமேகம்

19. முருங்கை - பித்தமயக்கம்

20. முசுமுசுக்கை - கபம், சளி

21. குப்பைமேனி - சர்ம வியாதிகள்

22. மணத்தக்காளி - வயிற்றுப்புண்

23. கரிவேப்பிலை - முடி நரைக்காது, உதிராது

24. அதிமதுரம் - நாள்பட்ட இருமல்

25. துளசி - தொண்டை, நுரையீரல் சளி

26. வெந்தயம் - உடல்நலம்

27. துத்திக்கீரை - மூலம், பவுத்திரம்

28. சிறுகுறிஞ்சான் - சர்க்கரை வியாதிக்கு ஏற்றது

29. வேப்பிலை  - வயிற்றுக் கிருமிக்கும், ரத்தசுத்திக்கும்                                                                                                                                           

30. பிரண்டை - ஜீரண சக்தியை அளிக்கும்.

31. அம்மாம் பச்சரிசி - வெட்டையை குறைத்து தாய்ப்பாலை அதிகரிக்கும். 

32. மருதம்பட்டை - இதயபலம்.

33. பூலாப்பூ.- புற்றுநோய்.

34. அரச இலை - கர்ப்பப்பைக்கு ஏற்றது

35. மகாவில்வம் - சகல ரோக நிவாரணி.

36. சிரியாநங்கை - எல்லா விஷங்களுக்கும்.

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...