Sunday, March 8, 2015

யூரிக் ஆசிட்





எல்லா உயிருள்ள உடல்களைப் போல, நாம் உண்ணும் உணவு என்பதும் (சைவ மற்றும் அசைவ உணவுகள்) செல்களால் ஆனதே. பாலூட்டி இன விலங்குகளில் இந்த உணவு ஜீரணமடைதல் நிகழ்வின் போது இந்த உணவில் உள்ள புரோட்டீன், கொழுப்பு போல, இதில் உள்ள மரபணு பொருட்களும் (DNA & RNA) ஜீரணமடைதல் நிகழ்விற்கு உட்படுத்தப்படுகிறது. 

அதோடு, உடலின் செல்கள் பல்வேறு காரணங்களால் மரணமடையும் போது அதில் உள்ள மரபணுக்களும் இதே நிகழ்வின் மூலம் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு புதிய செல்கள் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு, மரபணுக்களான DNA மற்றும் RNA ஜீரணமாதல் நிகழ்விற்கு உட்படுத்தும் போது அதன் மூலப்பொருட்களாக மாற்றப்படுகிறது. இந்த மூலப்பொருட்களே புதிய செல்கள் உருவாக்கத்தின் போது DNA மற்றும் RNA உருவாக்க பயன்படுகிறது. அந்த மூலப்பொருட்கள் மொத்தம் இரண்டு வகைப்படும். 

அவைகள் :-

பியூரின் (PURINES) மற்றும் பிரிமிடின் (PYRIMIDINES).

யூரிக் ஆசிட் என்பது பாலூட்டி வகை உயிரினங்களில், மேற்சொன்ன மூலப்பொருட்களில் ஒன்றான பியூரின்கள் (PURINES) பல்வேறு காரணங்களுக்காக வேதியியல் முறையில் (METABOLISM) உடைபடும் போது உண்டாகும் நச்சு தன்மை வாய்ந்த இறுதி நிலை கழிவுப்பொருள் (FINAL METABOLITE) ஆகும்.

இவ்வாறு செல்களில் உண்டாக்கப்படும் யூரிக் ஆசிட், இரத்தம் வழியாக எடுத்து செல்லப்பட்டு, சிறுநீர் உருவாதலின் போது அதில் கரைத்து, பின்னர் சிறுநீர் வழியாக உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது. இந்த யூரிக் ஆசிட் நச்சு தன்மை வாய்ந்தது என்பதால், தினசரி நமது உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டியது கட்டாயம். இது நலமாக உள்ள ஒரு உடலில் தினசரி நடக்கும் இன்றியமையாத நிகழ்வாகும்.

ஒரு நலமாக உள்ள மனிதனுக்கு சராசரியாக 250 – 750 மில்லி கிராம் யூரிக் ஆசிட் சிறுநீரிலும், 3.5 – 7.2 மில்லி கிராம் இரத்தத்திலும் இருக்கலாம். இந்த அளவு கூடவோ குறையவோ செய்யும் போது நமது உடல் நலத்தில் குறைபாடு என தெரிந்து கொள்ளலாம்.

எப்போதெல்லாம் யூரிக் ஆசிட் பரிசோதனை பரிந்துரை செய்யப்படுகிறது ?

தற்போதுள்ள நிலையில் CHEMOTHERAPHY எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சை செய்துக் கொள்ளும் புற்று நோய் நோயாளிகளும், RADIATION THERAPHY எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளும் புற்று நோய் நோயாளிகளுக்கும், GOUT எனப்படும் நோய் ஏற்பட்ட நோயாளிகளும் இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவை பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

GOUT என்பது இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு கூடும் போது, உடலின் பல்வேறு மூட்டுகளிலும் குறிப்பாக கால் விரல் மூட்டுகளில் இந்த அதிகப்படியான யூரிக் ஆசிட் படிமங்கள் போல (கற்கள்) ஏற்பட்டு, விரல்களை நீட்டி மடக்க இயலாத நிலை உண்டாகும். அவ்வாறு நீட்டி மடக்கும் போதும், நடக்க முயற்சிக்கும் போது தாங்க இயலாத வலி ஏற்படும். புற்று நோயாளிகள் மேற்சொன்ன சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது உடலில் அதிக அளவில் செல் இறப்பு ஏற்பட்டு, அதன் மூலம் இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு கூடும்.

அதோடு சில சந்தர்ப்பங்களில் உதாரணமாக, சிறுநீரக கோளாறுகள் மூலம் சிறுநீர் பிரித்தெடுக்கும் செயல் குறையும் போது இரத்தத்திலும், சிறுநீரிலும் யூரிக் ஆசிட் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சிறுநீரக கோளாறுகளின் போதும் இந்த பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.


யூரிக் ஆசிட் பரிசோதனை முடிவுகளில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ? 

இரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு, சாதரண அளவை விட அதிகமாக இருக்குமானால் அதை HYPERURICEMIA என அழைப்பர். இதன் படி அதிக அளவு யூரிக் ஆசிட் உருவாகி இரத்தத்தில் கலக்கிறது அல்லது சிறுநீரகங்களால் இரத்தத்தில் கலக்கும் யூரிக் ஆசிட்டை வெளியேற்ற இயலவில்லை என மருத்துவர்கள் அறிந்து கொள்வர். ஆனால் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க மேலும் பரிசோதிக்க வேண்டியிருக்கும்.

MULTIPLE MYLOMA, LEUKIMEIA போன்ற புற்று நோய்கள், சிறுநீரக செயல் இழப்பு, பெண்களில் கர்ப்ப காலம், அதீத குடிப்பழக்கம் முதலிய நிலையிலும் இந்த பரிசோதனை அதிக அளவு யூரிக் ஆசிட் கொண்டிருக்கும்.

இரத்தத்தில் குறைவான யூரிக் ஆசிட் அளவு என்பது பொதுவாக சில வகை கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களிலும், அதிக அளவு நச்சு பொருட்கள் இரத்தத்தில் கலக்கும் போதும் (புகை மற்றும் குடிப்பழக்கம்) மரபணு குறைபாடு தொடர்புடைய நோய்களிலுமே காணப்படும். உதாரணமாக வில்சன் நோய் குறைபாடு (WILSON DISEASE) – செம்பு (COPPER) எனப்படும் தாது பொருள் சம்பந்தப்பட்ட நோய்.

சிறுநீரில் அதிக அல்லது குறைவான அளவு யூரிக் ஆசிட் என்பது, இரத்தத்தில் காணப்படும் அளவை பொறுத்தே அமையும். இதை தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், சிறுநீரக கோளாறு, குடிப்பழக்கம் போன்றவை சிறுநீரில் யூரிக் ஆசிட் அளவை வேறுப்படுத்தும் காரணிகள் ஆகும்.

பியூரின்கள் (PURINES) செல்களில் வேதிவினைகள் மூலம் உடைக்கப்படுவதற்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது பாலூட்டிகளில் அனுதினமும் சாதாரணமாக நடக்கும் ஆனால் முக்கியமான வேதி நிகழ்வுகளில் ஒன்று ஆகும். சில குழந்தைகள் இயல்பிலேயே மரபணு குறைபாட்டின் காரணமாக இந்த வேதி நிகழ்வு தடைப்பட்ட நிலையில் பிறப்பதும் உண்டு. இந்த குழந்தைகளையும் இந்த பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும்.

இதை தவிர சில மருந்துகளின் அதீத உபயோகம் உதாரணமாக ஆஸ்பிரின், சில வகை வலி நிவாரணிகள் (Salycilate drugs), அதிக மது உட்கொள்ளுதல், புற்று நோய்க்கு மேற்கொள்ளப்படும் பல்கூட்டு மருந்துகளின் உபயோகம் – CHEMOTHERAPHY, அதீத அசைவ உணவுகள் (கல்லீரல் மற்றும் சிறுநீரகம்), பட்டினி அல்லது விரதம் காரணமாக உணவு உட்கொள்ளாமை, மன அழுத்தம், கடுமையான உடற்பயிற்சி போன்றவையும் இரத்த யூரிக் ஆசிட் அளவை மாறுபடுத்தும்.

செல்லும் அதன் செயல்பாடும்



செல் என்பது என்ன? 

ஒரு செல்லுக்குள் என்ன நடைபெறுகின்றது. அதன் உள் உருப்புகள் என்னென்ன? என்பதனை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக நம்மால் உருவாக்கபடும் ஒரு இயந்திரம் பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்ய வேண்டுமெனில் அதற்குள் என்னென்ன உதிரிபாகங்கள் உள்ளன, அது எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளது, அது எப்படி இருக்கும்? அது எப்படி வேலை செய்யும் என்று நன்கு தெரிந்தால்தான் அந்த பகுதியை தனியா கழற்றி, அதை சரி செய்ய முடியும்.

 
அது நாம் நம் கையால் உருவாக்கின இயந்திரம். ஆனால், நம்முடைய செல் இயற்கையாக உருவானது. அதனுள் என்ன என்ன இருக்கின்றது? அது எப்படி வேலைகளை செய்யும்? எதுவும் நமக்கு தெரியாது. இயந்திரம் போன்று, நம்முடைய உடலில் உள்ள செல்களில் ஏதாவது பிரச்சனை என்றால், அதாவது ஏதாவது ஒரு நோய் வந்தால், அதை சரி செய்ய நம்மால் அந்த பகுதியை மட்டும் தனியாக எடுத்தெல்லாம் சரி செய்ய முடியாது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கையில் ஒரு பிரச்சனை என்றால், கைக்கு மட்டும் தனியாக நம்மால் மருந்து கொடுக்க முடியாது.

பொதுவாக நாம் மருத்துகளை உடலில் ஊசி மூலமாவோ, அல்லது மாத்திரைகளாகவோ தான் எடுத்துக்கொள்வோம். அது நம்முடைய இரத்தம் மூலமாக, பாதிக்கப்பட்ட கைக்கு மட்டும் இல்லாமல், நம்முடைய உடல் முழுவதும் பரவும். அப்படி பரவும் போது, உடல் முழுக்க இருக்கிற மற்ற நல்ல நிலையில் இருக்கின்ற செல்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. ஆகவே, ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படும் போது இதெல்லாம் கவனமாக பரிசோதிக்கப்படும். இதையெல்லாம் பரிசோதிக்கப்பட வேண்டுமென்றால், நமக்கு செல்கள், அதனுடைய அமைப்பு, அதன் வேலை என்று எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிருந்தால் தான் நம்மால் நல்ல மருந்துகளை கண்டுபிடிக்க முடியும்.

ஆனால், துரதிஷ்டவசமாக, மனிதன் இந்த விசயத்தில் பாதி கிணறுதான் தாண்டியிருக்கான். இன்னும் ஒரு செல்லுக்குள் தெரிந்துகொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. அதனால்தான் நிறைய நோய்களுக்கு இன்னும் நம்மால் சரியான சிகிச்சை முறை கண்டுபிடிக்க முடியவில்லை.

நம்முடைய உடல் போன்றே செல்லும் அதனுடைய சொந்த  உறுப்புகளை கொண்டிருக்கு, அதாவது நம்முடைய உடல் மாதிரியே, செல்லும் ஒவ்வொரு வேலைக்கும் தனி தனி உறுப்புகளை வைத்திருக்கின்றது. முதலில் செல்லுக்கு என்ன என்ன வேலை என்று பார்ப்போம். 

1 . தன்னை உயிரோட வைத்துக்கொள்ளணும். அதுக்கு தேவையான சக்தியை நாம் சாப்பிடுகின்ற உணவில் இருந்து தயார் செய்ய வேண்டும். 
2 . தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டும்.
3. அந்த வேலையை செய்ய தேவையான இயந்திரங்கள் அல்லது தொழிலாளர்கள் அதாவது புரோட்டீன்களை உருவாக்கவேண்டும்.
4 . அந்த வேலை சரியாக செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கவேண்டும். வேலை முடிந்ததும் அந்த புரோட்டீகளை அழிக்கவேண்டும்.
5 . முக்கியமாக தன்னுடைய எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதாவது தன்னை தாக்க வரும் நோய் கிருமிகளிடமிருந்து, அப்படி ஒரு வேலை நோய் தாக்கிட்டா, அந்த கிருமிகள் அழிக்கப்படவேண்டும்.
6 . இனப்பெருக்கம், அதாவது வயதாகியோ அல்லது நோய் தாக்கியோ அல்லது விபத்து மூலமாகவோ இறந்து போன செல்களுக்கு மாற்று செல்களை உருவாக்கவேண்டும். 

இதுபோன்று ஒரு செல்லுக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றது. இருந்தாலும் இவை தான் முதன்மையானவை. இத்தனை செயல்களும் தடையில்லாமல் நடந்தால் தான் ஒரு செல் ஆரோக்கியமாக இருக்கின்றது என்று அர்த்தம்.   இதில் எந்த இடத்தில் ஒரு பிரச்சனை வந்தாலும் மற்ற எல்லா வேலையும் சேர்த்து பாதிக்கப்படும்.

செல் ஆரோக்கியமா இருக்கவேண்டும் என்றால், அதற்கு தேவையான சக்தி, அதாவது தன்னோட உயிரை காப்பாத்திக்கவும், தனக்கு அளிக்கப்பட்ட வேலைகளை செய்யவும் தேவையான சக்தியை ஒவ்வொரு செல்லும் தானே தயார் செய்துகொள்ளும். நம்முடைய உடலுக்கு தேவையான மொத்த சக்தியையும் தருவது சர்க்கரை. அதாவது carbohydrates. அதிலும்  முதன்மையாக இருப்பது  குளுகோஸ்.

ஒரு செல் தனக்கு தேவையான சக்தியை தயாரிக்க பெருமளவு குளுகோஸை தான் பயன்படுத்துகிறது. குளுக்கோஸ் கிடைக்கவில்லை என்ற நிலையில்தான் மற்ற அதாவது லிபிட்ஸ் அல்லது புரோட்டீன்கள் பயன்படுத்தப்படும்.

இந்த சக்தி தயாரிக்கின்ற வேலை ஒரு பெரிய செயல்முறை. நாம் சாப்பிடுகின்ற சாப்பாடு கிட்டத்தட்ட சுமாராக ஒரு இருபது விதமான வேதி வினைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடைசியாகத்தான் நமக்கு தேவையான சக்தி அதில் இருந்து கிடைக்கின்றது. இது நம்முடைய உடலில், கல்லீரலில்  (liver ) நடக்கும்.

மேலே சொல்லப்பட்டுள்ள வேலைகளை செய்ய நம்முடைய செல் தனித்தனியாக தனக்கு மட்டுமே சொந்தமான உறுப்புகளை வைத்திருக்கின்றது. மனிதன், மிருகம் என்று வேறு வேறாக இருந்தாலும் உடலுக்கு ரெண்டு கை, ரெண்டு கால், தலைன்னு அடிப்படை கட்டமைப்பு ஒன்றுதான், அது போலத்தான் செல்லுக்கும் உண்டு. தாவரம், விலங்கு, பாக்டீரியா என எல்லாவற்றிற்கும் ஒன்று தான். இருக்கின்ற இடத்திற்கு ஏற்றது போன்று செய்கின்ற வேலையிலும், அதனுடைய அமைப்பும்  சிறிது சிறிது வித்தியாசப்படலாம் இதுபோல செல்லைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் தற்பொழுது இது போதும்.



அப்பெண்டிசைடிஸ் - குடல் வால் நோய்



Appendicitis



நாம எல்லாரும் இதை பற்றி கேள்விப்பட்டு இருப்போம். தீராத வயிறு வலி என்று மருத்துவமனை சென்று அப்பெண்டிசைடிஸ் என்று சொல்லி ஆப்பரேசன் செய்து கொண்டவர்கள் அதிகம். அப்பெண்டிசைடிஸ் பிரச்சனையினால் உயிரையே விட்டவர்களும் உண்டு.  

சரி.... அதென்ன அப்பெண்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் நோய்...? உயிரே போகின்ற அளவுக்கு அது என்ன அப்படி ஒரு முக்கியமான விஷயம்? தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வயிற்றில் சிறு குடலும் பெருங்குடலும் இணைகின்ற இடத்தில ஒரு சிறிய வால் போன்று நீட்டிக்கொண்டு இருப்பதுதான் குடல் வால் என்று சொல்லக்கூடிய ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற அப்பெண்டிக்ஸ் (appendix).

குடலில் இருந்து வால் போன்று வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதினால் இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம். இது நம்முடைய உடலில் இருக்கின்ற ஆனால் நாம் பயன்படுத்தாமல்  இருக்கின்ற ஒரு உறுப்பு.

நாம் எல்லோரும் அடிக்கடி சொல்கின்ற அல்லது நம்மிடையே பேசப்படுகின்ற ஒரு விஷயம், எந்த ஒரு பொருளையும் நாம் அதிகமாக பயன்படுத்தாமல் வைத்திருந்தால், அது கெட்டு போய்விடும் அல்லது பழுதாகி விடும். அது பொருளுக்கும் மெசினுக்கும் மட்டும் இல்லை, நம்முடைய உடலுக்கும் பொருந்தும்.

எந்த ஒரு உறுப்பினை நாம் முழுவதுமாக பயன்படுத்தாமல் இருக்கின்றோமோ, அந்த உறுப்பு நம்முடைய அடுத்த பரிணாம வளர்ச்சியின் போது சிறியதாகவோ, அல்லது காணாமலோ போய்விட வாய்ப்புகள் இருக்கின்றன. அதுபோல, எந்த உறுப்பை நாம் தொடர்ந்து பயன்படுத்துகின்றோமோ அது நம்முடைய அடுத்த பரிணாம வளர்ச்சியின் போது பெரிதாக வளரலாம்.

தற்பொழுது இருக்கின்ற வாழ்க்கை சூழலை வைத்து பார்க்கின்ற போது அப்படி நம்முடைய அடுத்த பரிணாம வளர்ச்சியில் பெரிதாக வளரும் என்று எதிர்ப்பார்க்கிற ஒன்று நம்முடைய மூளை. காணாமல் போய்விடும் என்று எதிர்ப்பார்க்கிற ஒன்று நம்முடைய தலைமுடி.

இப்படி காலம் காலமாக மனிதன் பயன்படுத்தாமல் விட்டு அளவில் சிறியதாகி போன ஒரு உறுப்பு தான் இந்த குடல் வால் எனப்படும் அப்பெண்டிக்ஸ். ஆனால், இப்பவும் இது விலங்குகளின் பயன்பாட்டில் உள்ள ஒரு உறுப்பு. மனிதன் ஒரு முழு மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையாமல் விலங்காகவே இருந்த பொழுதும், பிறகு விலங்குகள் போன்று காடுகளில் வாழ்ந்த பொழுதும் இந்த உறுப்பு முழுமையாக பயன்பாட்டில்தான் இருந்தது. 

அதாவது, அப்பொழுது இருந்த விலங்குகளும், விலங்குகள் மாதிரி இருந்த மனிதனும் எந்த ஒரு உணவையும் சைவம், அசைவம் இரண்டையும் சமைக்காமல் அப்படியே உண்டு, வாழ்ந்தார்கள். இதில அசைவ உணவில  எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சைவ உணவில் ஒரு பிரச்சனை இருந்தது.

அசைவம் எனப்படும் இறைச்சி என்பது விலங்கு செல்களால் ஆனது. சைவம் என்பது தாவரங்கள். இந்த தாவர செல்களில், விலங்கு செல்களில் இல்லாத ஒன்று அதிகமாக இருக்கின்றது. அதுதான் பிரச்சனைக்கு காரணம். அதுவே.... செல் சுவர் ஆகும்.

இந்த செல் சுவர் என்பது விலங்கு செல்களில் இல்லாததால், நம்முடைய ஜீரண மண்டலம் தன்னிடம் உள்ள என்சைம்களை வைத்தே எளிதாக ஜீரணம் பண்ணிவிடும். ஆனால், சமைக்காமல் உள்ள தாவர உணவான இந்த செல்சுவர் கிட்ட நம்ம ஜீரண மண்டலத்தோட ஜம்பம் பலிக்காது. ஏன் என்றால், செல் சுவர் செல்லுலோஸ் என்கின்ற பாலி - சாக்ரைடால் ஆனது.

இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண செல்லுலேஸ் என்கின்ற சிறப்பான என்சைம் தேவை. இந்த ஸ்பெசல் என்சைமை உற்பத்தி செய்யக்கூடிய உறுப்பு தான் இந்த குடல் வால்.  மத்த என்சைம்கள் இந்த செல்லுலோசை ஜீரணம் பண்ண முடியாததற்கு காரணம் செல்லுலோஸின் குளுகோஸ் மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்டு இருக்கிற பிணைப்பு வேறுவிதமானதாக இருப்பதுதான் காரணம். இது போன்ற ஒவ்வொரு பிணைப்பும் அதற்கென உள்ள தனிப்பட்ட என்சைமால் மட்டும் தான் உடைக்க முடியும்.

ஆகவே அப்படி மனிதன் தன்னுடைய சாப்பாட்டை சமைக்காமல் சாப்பிட்டு வந்த அந்த காலத்தில் இந்த குடல் வால் தாவர உணவில் இருக்கும் செல்லுலோசை ஜீரணம் செய்யக்கூடிய செல்லுலேஸ் என்கின்ற என்சைமை உற்பத்தி செய்யும் வேலையை செய்து கொண்டு இருந்தது.

காலப்போக்கில், நெருப்பை கண்டுபிடித்த மனிதன் தன்னுடைய உணவை சமைக்க ஆரம்பித்ததும் இந்த என்சைமுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. தற்பொழுது சமைக்கும் பொழுது அந்த வெப்பத்தினால், செல்லுலோஸ் தானாவே உடைந்து விடுகிறது.

பல ஆயிரகணக்கான வருடங்கள் மனிதன் சமைத்து உண்பதினால், இந்த குடல் வால் படிப்படியாக வேலையிழந்து தன்னுடைய உருவம் இழந்து கடைசியாக தான் ஒரு காலத்தில் மனித உடலில் இருந்ததிற்கு அடையாளமாக, இன்றும் சிறிய வால் போன்று அந்த இடத்திலேயே ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

தற்பொழுது நாம் சமைக்காமல் சாப்பிடுகின்ற சில தாவர உணவுகளில் இருக்கின்ற செல்லுலோஸ் ஜீரணம் ஆகாமல்  அப்படியே வெளியேற்றப்படுது. ஆனால், விலங்குகள் இன்னமும் தாவர உணவை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் அதற்கு இன்னமும் இந்த குடல் வால் அப்படியேதான் உள்ளது.

அப்பண்டிசைடிஸ் என்கின்ற இந்த குடல் வால் சிறு குடலும், பெரும் குடலும் இணைகின்ற இடத்தில் இருப்பதினால், நம்முடைய குடலிலுள்ள கழிவு பொருள்களில் இருந்து சில சமயம் நோய் கிருமிகள் குடல் வாலுக்குள் சென்று தொற்று நோயை உண்டாக்கி வீக்கம், வலியை உண்டாக்கும். இது ஒரு  நிலைக்கு பிறகு இந்த குடல் வால் பெரிதாகன் வீங்கி வெடிக்கிற நிலைக்கு வந்து விடும்.

அது போன்ற வீங்கி வெடிக்கின்ற அளவிற்கு வந்துவிட்டால் நாம் கண்டிப்பா அறுவை சிகிச்சை மூலமாக இந்த நோய் தொற்றிய பகுதியை நீக்கியே ஆக வேண்டும். இல்லையெனில், அது உடைந்து, குடலுக்குள் இருக்கிற அத்தனை நோய் கிருமிகளும் ரத்தத்தில் கலந்து, நம்முடைய மொத்த உறுப்புகளுக்குமே பாதிப்பு உண்டாக்கி உயிர் போயிடும் நிலை உருவாகும். இது தான் அப்பண்டிசைடிஸ்.

ஆகவே குடல்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம், தேவையற்ற உணவுக்கழிவுகளை வெளியேற்றாமல் அடக்கி வைப்பது இதுபோன்ற நிலைக்கு நம்மை கொண்டு சேர்க்கும்.


செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...