Monday, March 3, 2014

குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளை தவிருங்கள்


உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும்.

வெள்ளை நிற உணவுகள்


நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும்.

சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். இதில் சீனி, பால், தயிர் போன்றவைகளை அறவே தவிர்ப்பது இன்னும் சிறப்பு.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்க வைக்கும்.

கொழுப்பை கரைக்கும் உணவுகள்

கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.

வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும். ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.

சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.

சரி விகித உணவுகள்
காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.

முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

சூடான நீர்


குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

வீட்டு உணவுகள் சாப்பிடலாம்

3 - வேளையாக சாப்பிடாமல் 3 - மணி நேர இடைவெளியில்         6 -  தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை (அதே அளவை) இரண்டாக பிரித்து 2 - வேளையாக சாப்பிடுங்கள். இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.

இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும். மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள். இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

அதிக எண்ணெய், மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். பால் சேர்க்காத டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.

முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள். வெளியில் சாப்பிடுவது கூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா, சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

நேர்மறை எண்ணங்கள்


உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள். அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்


முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும், நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும்

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் - தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இவர்களை நோயாளிகளாக மாற்றியது  இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி  அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும்  கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது. இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?


பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும். அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.

ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.

திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.

இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும். அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity)


பாக்டீரியாக்கள் நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் உள்ளன. அவை எல்லா நேரங்களிலும் நமது உடலில் இருக்கின்றன.

நமது மூச்சுக் காற்று அல்லது நம் தோலில் ஏற்படும் காயங்கள் மூலமாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைந்து விடுகின்றன.

ஆனால் அவற்றில் இருந்து ரத்த வெள்ளையணுக்கள் நம்மை பாதுகாக்கின்றன. இவை `பாகோசைட்' என்று அழைக்கப்படுகின்றன.

இவை நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுகின்றன. பாகோசைட் பாக்டீரியாக்களை எப்படி கொல்கிறது என்று தெரியுமா?

முதலில் இது பாக்டீரியாவை நேருக்கு நேர் சந்திக்கிறது. பின்னர், பாக்டீரியா ரத்தத்தால் பக்குவமாக்கப்படுகிறது. அதன்பின்னர்தான் பாக்கோசைட் பாக்டீரியாவை அழிக்கிறது.

ரத்தத்தில் இருந்து கொண்டு நுண்ணுயிரிகளைப் பதப்படுத்தும் பொருளுக்கு `ஆப்ஸனின்' என்று பெயர். ரத்தத்தில் ஒரு துளியை எடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால், அதில் உள்ள ஆப்ஸனின் என்ற பொருளின் வீரியம் தெரிந்து விடும்.

ரத்தம், பாகோசைட், ஆப்ஸனின் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால், உடலினுள் பாக்டீரியா புகுந்து நோய் உண்டாக்கி விடும். இதுபோன்ற நேரங்களில், உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை ‘வரு முன் காப்போம்’ என்பதுதான் தலைசிறந்த வழி.

நோய் தாக்குதலுக்கு ஆளாகி, அவஸ்தைபட்டு, பின்னர் அதிலிருந்து விடுபட நடவடிக்கை மேற்கொள்வதைவிட, வரும்முன் காப்பதே சிறந்தது.

இன்றைய ரசாயன உலகில், புதிது புதிதாக நோய்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதற்கான தீர்வுகள் குறித்த ஆய்வுகளும் மறுபுறம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வருமுன் காத்துக் கொள்ள பல பரிந்துரைகளை டாக்டர்களும் வல்லுனர்களும் பட்டியலிடுகின்றனர். இந்தப் பட்டியலில் இயற்கையின் கொடை அதிகம்.

இந்த வரிசையில் மஷ்ரூம் எனப்படும் காளான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மார்பக மற்றும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோயில் இருந்து காளான் பாதுகாப்பு அளிக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். குறைந்த கலோரியை கொண்ட இது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளானில் உள்ள எர்கோ தையானின் என்ற மூலப்பொருள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய்த்தாக்குதல் வாய்ப்புகள் குறையும். சைவ உணவான காளானில் மீன்எண்ணெய்க்கு நிகராக வைட்டமின் டி சத்து மிக அதிக அளவில் உள்ளது. இந்த சத்து நேரடியாகவும் உடனடியாகவும் காளானில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கர்ப்ப காலத்தில் இயற்கையான நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது. இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

விளாம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில்நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.

நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.

வைட்டமின் ஏ, சி, இ:

வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட் டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன.

கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.

ப்ரோபயாட்டிக்:

தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட்டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின்
எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்துபோராடஉதவுகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சைசாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை
அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா
ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்ப நிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில்
கலந்து சாப்பிடலாம்.

துத்தநாகம்:

இது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக
பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்புதன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக் குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

மூலிகைகள்:

உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன.

இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலைவிட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது.

மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியா சான்தைன்’ மற்றும் “லூட்டீன்” ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன.

இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலும், வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு திறன் இது போன்ற உணவு பழக்கங்களினால் அதிகரிக்கிறது.

பிராய்லர் கோழியும் அதனை உண்பதினால் வரும் நோய்களும்...


KFC மரபணு மாற்றம் கோழியைப் போன்றே 40  நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான ரசாயணங்கள்  ( Chemicals) கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

இந்த கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வேகமாக வளர்வதற்காக கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது.

இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசி, செல்களை வேகமாக வளரவைத்து கோழியின் எடையை அதிகமாக்குகிறது. பண்ணை வைத்துள்ள ஒரு சிலர் குறுகிய லாப நோக்கத்தோடு ஈஸ்ட்ரோஜென் மருந்துகளை கோழிகளுக்கு அதிகளவில் கொடுத்து விடுகின்றனர்.

இதனால் பிராய்லர் கோழிக்கறி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக �பகீர்� தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாம் காலையில் எழுந்து, இரவு தூங்கும் வரை செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மனித உடலில் இன்சுலின், பிட்யூட்டரி, ஈஸ்ட்ரோஜென், புரஜ்சக்ஸ்ட்ரான் என 30க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் சுரக்கிறது.

இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியமான வேலையை செய்துவருகிறது. இவை அனைத்தும் மனித உடலில் தேவையான அளவு இருந்தே ஆக வேண்டும். ஏதேனும் ஒரு ஹார்மோன் சுரக்காமல் குறைந்தாலோ அல்லது தேவையை விட அதிமானாலோ உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

இவற்றில் புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் ஆண்களுக்கும், ஈஸ்ட்ரோஜென் பெண்களுக்கும் 2 ம் நிலை பால் வேறுபாட்டை பிரிக்கிறது. அதாவது இருபாலருக்கும் உடல் உறுப்புகளில் மாற்றங்களையும், உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது.

புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிகம் சுரந்தால் முகத்தில் முடி வளர்வது உள்ளிட்ட பிரச்னைகளும், ஈஸ்ட்ரோஜென் ஆண்களுக்கு அதிகம் சுரந்தால் கைனக்கோமாஸ்ட்ரோ எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகிறது.

கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை உதவிப்பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “உணவுப்பொருட்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் சமைத்த பின்னரும் உணவில் கலந்தே இருக்கும் என ஆய்வில் தெரிந்துள்ளது. ஈஸ்ட்ரோஜென் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்பெய்தல், கர்ப்பப்பை புற்று நோய், உடல் பருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது கைனக்கோ மாஸ்ட்ரோ எனப்படும் மார்பக வீக்கநோய் ஏற்படுகிறது.

ஆண்களுக்கு மார்பில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும். அதேபோல் ஆண்களிடம் பெண் தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே ஈஸ்ட்ரோஜென் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொள்வது நல்லது,” என்றார்.

அதனால், பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான் ஆகும்.

6  மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது.

இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர்  மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட கோழி, மற்றும் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது.

சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. எனவே, இனி பிராய்லர் கோழிகளை உண்பதனை தவிர்ப்பீர்! உடல் நலம் காப்பீர்!.

KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்



KFC ல் உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார். புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன!

என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை. அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.

அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம் இதை ”கோழி” என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளது!!

இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம் தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.

அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத் தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் செலவும் குறைவாம்!!

இந்த வகைக்கோழிகள் இனப்பெருக்கம் செய்யாது. இறகுகள் இல்லாததால் சூரிய வெளிச்சத்தில் பாதிக்கப்படும். மேலும் தொற்று நோய்களும் எளிதில் தாக்கும் என்று கூறுகிறார்கள். KFC ல் உண்ணும் முன் நல்லா யோசிங்க..

புற்றுநோய் ஒரு சிறப்புப் பார்வை





புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. 

புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது.

சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி அல்லது கழலை எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும்.

தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.

புற்றுநோய்களின் அறிகுறிகள் என்னென்ன?

நீண்ட நாட்களுக்கு வாயிலோ நாக்கிலோ வெள்ளையான தடிப்பு இருந்தால் வாய் புற்று நோய் வரும். 

இரத்தக் கசிவு மார்பிலிருந்தால் மார்பு புற்று நோய் உண்டாகும்.  

மாதவிடாய் நின்றபின் இரத்தக் கசிவு மற்றும் வெள்ளைப்படுதல்  இருந்தால் கருப்பை புற்றுநோய் அறிகுறியாகும். 

மூலமில்லாத இரத்தக் கசிவு, மலங்கழிக்கும் போது இருந்தால் குடல் புற்றுநோய் அறிகுறியாகும். 

நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண், தோல் புற்று நோயின் அறிகுறியாகும். 

உணவை விழுங்கும் போது ஏற்படும் அடைப்பு உணவுக் குழாய் புற்று நோயின் அறிகுறியாகும். 

திடீர் குரல் மாற்றம் மூச்சுக் குழாயின் புற்று நோயாக இருக்கலாம். மச்சம் பெரிதானால் புற்று நோயாகலாம். 

எந்த நோயும் இல்லாமல் உடல் எடை குறைதல், பசியின்மை, அஜீரணம் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். 

தொடர்ந்து நீடித்த, நாளுக்கு நாள் அதிகமாகிற, மருந்துக்கு கட்டுப்படாத தலைவலி மூளைப் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சிகிச்சைக்கு குறையாமல் தொடருகிற காமாலை நோய் பித்தப்பை மற்றும் கணையத்தின் புற்றுநோய்களின் அறிகுறியாகும். 

திடீரென பெரிதாகின்ற, கரையாத நிணநீர் கட்டி புற்று நோயாக இருக்கலாம்.

இருமல், மூச்சிறைத்தல், கோழையில் இரத்தம் போன்றவை நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம். 

வயிற்றுவலி, இரத்தவாந்தி, சாப்பிட இயலாமை, வாந்தியில் இரத்தம் போன்றவை இரைப்பை புற்றுநோயாக இருக்கலாம்.

வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கும் மலச்சிக்கலும் மாறி மாறி வருதல் வயிற்று வலி, வாந்தி போன்றவை பெருங்குடல் புற்று நோயாக இருக்கலாம்.

வலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, வாந்தி, கண்பார்வை குறைவு, கைகால்கள் செயலிழத்தல், போன்றவை மூளை புற்று நோயாக இருக்கலாம்.


புற்றுநோயை பற்றிய கருத்துக்கள்.

1.
புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல. புற்று நோயுள்ளவர்களை பராமரிப்பதால் யாருக்கும் பரவுவதில்லை.
2.
ஆரம்பகால புற்றுநோயை எளிதில் அறியமுடியும். முழுவதும் குணமாக்க முடியும்.
3.
பல்வேறு புற்று நோய்களுக்குக் காரணங்கள் இன்னும் தெரியாமலேயே  இருக்கிறது.
4.
புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான உணவு பழக்கமின்மை, செயற்கை உணவு பொருட்கள் போன்றவைகளைத் தவிர்த்தல் பலநோய்களை தடுக்கும் வழிகளாகும்.
5.
இன்றைய நாகரீக உலகில் மாரடைப்பும், புற்றுநோயும் மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

புற்று நோய் வகைகள்

1.
மார்பக புற்று நோய்
2.
சினைப்பை புற்றுநோய்
3.
கருப்பை வாய் புற்று நோய்
4.
கருப்பை புற்றுநோய்
5
உணவுக் குழாய் புற்று நோய்
6.
இரைப்பை புற்றுநோய்
7.
மலக்குடல் புற்றுநோய்
8.
கணைய புற்றுநோய்
9.
கல்லீரல் புற்றுநோய்
10.
சிறுநீரக புற்றுநோய்
11
சிறுநீர்ப்பை புற்றுநோய்
12.
புராஸ்டேட் புற்றுநோய்
13.
பியோகுரோமோ சைட்டோமோ
14.
இரத்தப் புற்றுநோய்
15.
நிணநீர் கட்டிகளின் புற்றுநோய்
16.
குரல்வளை புற்றுநோய்
17.
நுரையீரல் புற்றுநோய்
18.
புளுரா (நுரையீரல் சவ்வு) புற்றுநோய்
19.
சிறுவர்களின் எலும்பு புற்றுநோய்
20.
எய்ட்ஸ் புற்றுநோய்-கபோசி சார்கோமா
21.
மச்ச புற்றுநோய்
22.
தோல் புற்றுநோய்
23.
மூளையில் புற்றுநோய்

புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள்

நாகரீகம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்பாகக் கருதப்பட்டது. இன்று, அது நடைமுறையாக, பழக்கவழக்கங்களாகப் பார்க்கப்படுகிறது. உடைகள், உணவுகள், உடல் அலங்காரங்கள், பேச்சு மொழிகள், பயணம் செய்யும் வாகனங்கள் அனைத்தும் நாகரீகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

இந்த நாகரீகம் தனி நபருக்கோ, சமூகத்துக்கோ உயர்வைத் தரவில்லை. மாறாக, பலவிதமானத் தொல்லைகளை உண்டுபண்ணுகிறது. அவற்றில் சிலவற்றை, இந்தியா ஒளிர்ந்திடச் சில சிந்தனைகள் என்ற புத்தகத்தில் பொறியாளர், டாக்டர் தில்லைநாயகம் குறிப்பிடுகிறார்.

200
கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும்.

தூய காற்றைச் சுவாசிக்கும் உரிமையை அடிப்படை உரிமையில் சேர்க்கச் சொல்லி, உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளையும் வற்புறுத்தி வருகிறது. இன்றைய நாகரிகத்தால் சுத்தமான சுவாசக் காற்றை அளிக்க முடிகிறதா?

மது, குடிப்பவரின் குடும்பத்தைப் பாதிக்கிறது. குடிப்பவரின் உடல்நலம் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகிறது. ஆனால், புகைப்பவர்கள் 90-க்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்களையும், 4,000-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்களையும் காற்றில் கலந்துவிடுகின்றனர். இதன் மூலம் மற்றவர்களுக்கு சுவாசிக்கத் தூய காற்று இல்லாத நிலை ஏற்படுகிறது.

இதன் விளைவு என்ன?

நம் நாட்டில் இன்று 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களில், 32 பேரில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் முதலில் ஒரு பக்கம் மார்பகம் நீக்கப்படும். ஒரு சிலருக்கு மறுபக்க மார்பகமும் சில காலம் கழித்து நீக்கப்படும்.

முடிவில் மிகுந்த மன உளைச்சலோடு துன்புறுகிறார்கள். தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, வயிற்றுப் புற்று போன்ற பல வகைப் புற்றுகளால் எண்ணற்றோர் பாதிக்கப்படுகிறார்கள்.

இப்படிக் கூறும் தில்லைநாயகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் கூறுகிறார்.

தொண்டைப் புற்றுநோய் கண்டவரை வெறும் ஆரஞ்சுச் சாறு மட்டும் குடித்துக் குணப்படுத்திவிடலாம் என்பது ஆச்சரியம். ஆனால் உண்மை. மற்ற வகை புற்று நோயாளிகளுக்குத் திராட்சைப் பழத்தை மட்டுமே கொடுத்து வந்தால், நோயை விரைவிலேயே குணப்படுத்த முடியும்.    

200 கிராம் திராட்சைப் பழத்தில் தொடங்கி இரண்டு கிலோ வரை உண்டு வந்தால், புற்று நோய் விரைவில் குணமாகும். தினமும் கேரட்டும், திராட்சையும் உண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தவிர்த்துக்கொள்ளலாம். வெறும் தேங்காயும், வாழைப் பழமும் மட்டுமே உணவாகக் கொடுத்து சிறிது காலத்திலேயே அனைவரையும் தொழுநோயிலிருந்து குணப்படுத்தி விடலாம்.

ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் வாழைப்பழம், கேரட், திராட்சை, ஆரஞ்சு போன்றவை எந்த அளவுக்கு நோய் தீர்க்கவல்லவை?                  

150 நாட்களில் விளையும் கேரட் கிழங்குக்கு, 55 முறை இரசாயன நஞ்சு தெளிக்கிறார்கள். 10  மாதத்தில் பலன் தரும் வாழை மரத்துக்கு, நான்கு முறை ஊசி மூலம் இரசாயன நஞ்சை ஏற்றுகிறார்கள். 100  நாட்களில் பலன் தரும் திராட்சைக்கு, 17 முறை இரசாயன நஞ்சு தெளிக்கிறார்கள்.  

இது விஞ்ஞானம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ள நாகரிகம்.
விஞ்ஞானம் ஒன்றே நமது துன்பங்களுக்கு எல்லாம் விடையளிக்க முடியும் என்ற தவறான சிந்தனை 20-ஆம் நூற்றாண்டில் மக்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது.

உணவே மருந்து என்பதுதான் நமது சித்தர்களின் வாக்கு. ஆனால், மருந்தாகக்கூடிய உணவே இன்று நஞ்சாகிக் கிடக்கிறது.

நமது பழங்களையும், கொட்டைகளையும் நாடெங்கும் பரப்பவல்ல பறவைகள் மடிந்தன. பயிர்களைப் பாதுகாப்பதில் பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உரம் என்ற பெயரில் மண்ணில் இடப்பட்ட இரசாயனங்கள் மண்ணில் உள்ள உயிரினத்தை அழித்ததோடு, விளைச்சலையும் வீழ்த்தியது. கூடவே, நைட்ரஸ் ஆக்ஸைடை தோற்றுவித்து பூமி சூடாவதற்கும் முக்கியக் காரணியாகிறது.

மேலே கூறப்பட்ட விவரங்கள் வலியுறுத்தும் உண்மை என்ன?
விஞ்ஞான வளர்ச்சி மட்டுமே முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்ல முடியாது. 

ஆன்மீகம் மட்டுமே பல்லுயிர் பேணும் பண்பை வளர்க்கும்.

கொலைத் தொழிலை விட்டொழிப்போம். மரம் நட்டு வெப்பம் தணிப்போம் 

என்பதை வேத வாக்காக்கிச் சூளுரைப்போம்!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’.

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...