Friday, November 22, 2013

கர்ப்பப்பை இறக்கத்தை குணமாக்க....


இன்றைய வாழ்க்கை முறையில் பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம் என்ற தொந்தரவு உள்ளது. அவர்கள் தாங்களே இதுபோல எழிய முறை மருந்து செய்து சாப்பிட்டுவர கீழிறங்கிய கர்ப்பப்பை மேலே ஏறும்.


ஒரு சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும்.
அதை பசு வெண்ணெயால் மூடவும்.
அதை  நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு,
நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.


சிறிது நேரத்தில்,

வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.
சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,

மேலும், மேலும்,

பசு வெண்ணெயை  கொஞ்சம், கொஞ்சமாக
அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.
இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும்.
இறுதியாக  மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,
நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.

இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து,

காலை, மாலை இரு வேளையும்,

தேனில்  உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில்,

இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.

வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு,
தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்


 
பல‌ர் சூ‌யி‌ங்க‌ம் சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். இதனா‌ல் எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. ஆனா‌ல் அத‌ற்கு ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலாம்
ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.

வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம் ‌ஜீரண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல் ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

இ‌னி‌ப்பு ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் போது வாசனை‌க்காக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், ஏல‌க்கா‌யி‌ல் ப‌ல்வேறு அ‌ரிய குண‌ங்க‌ள் உ‌ள்ளன.
புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு‌ச்ச‌த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல‌க்கா‌யி‌ல் கலந்துள்ளன.

அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்கா‌ய் பெ‌ரிது‌ம் உதவு‌ம். ஏல‌க்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

பாலில் ஏ‌ல‌க்கா‌ய் சே‌ர்‌த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அரு‌ந்‌தி வ‌ந்தா‌ல் குழ‌ந்தை‌ப் பே‌றி‌ல் ஏ‌ற்படு‌ம் குறைபாடுக‌ள் ‌நீ‌ங்கு‌ம். இதனை இருபாலரும் அரு‌ந்தலா‌ம். இருவரு‌க்குமே பல‌ன் தரு‌ம்.


அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூ‌ள் ம‌ட்டுமே பயன்படுத்த வே‌ண்டு‌ம்.


Monday, November 11, 2013

பொடுகை ஒழிப்போம், கூந்தலை காப்போம்!


பெரும்பாலான பெண்களுக்கு பொடுகுத்தொல்லை இருக்கும், இவர்கள் கீழே சொல்லியுள்ள படி மூலிகை தேங்காய் எண்ணெய் தயார் செய்து தினமும் தலைமுடியில் தடவிவர பொடுகு,பேன்,ஈறு,தலைமுடி உதிர்தல் போன்றவைகளை தவிர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
*
வசம்பு- 150 கிராம்
*
வெள்ளைப்பூண்டு-50 கிராம்
*
ஒரு லிட்டர் தேங்காயெண்ணெய்.


முதலில் வசம்பை பொடியாக நறுக்கி நசுக்கிக் கொள்ளவும். வெள்ளைப்பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
வசம்பு

 
                            வெள்ளைப்பூண்டு

பின் இவையிரண்டையும் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு கடும்  சூரிய வெப்பத்தில் ஏழு நாட்கள் வைக்க வேண்டும். அதாவது நல்ல வெய்யிலில் ஏழு நாட்கள் வைத்திருந்து பின் அதை வடிகட்டி எடுத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
                                  
இதை வழக்கமான தலைமுடி எண்ணையாக பயன்படுத்தலாம்.
                           
 *
இதனால் பொடுகு, ஈறு, பேன் ஒழியும். முடி உதிர்தலும் நிற்கும்.



வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து



                                               வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின்  குறைபாட்டால்தான் இந்த நோய் வருகின்றது. இதை நோய் என்று சொல்வது கூட சரியல்ல. ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அளவில் படும் துன்பம்  மிக அதிகம். சமூக ரீதியாக இது குறித்த விழிப்புணர்வு அறவே இல்லை.



                                                               


கருவேல மரம்
வெந்தயம்



கீழாநெல்லி
                                                                           

                                
                                                *
கருவேலம்பட்டைப் பொடி- 100 கிராம்  
                                   
                                                *
கீழாநெல்லிப் பொடி- 100 கிராம்

                                               
இவை இரண்டையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து அரை லிட்டராக சுண்டும் அளவுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு அதை வடிகட்டி, இத்துடன்
                                    
                                                  *
வெந்தயப் பொடி- 80 கிராம்

                                                   
கலந்து, வெய்யிலில் வைக்கவும். நீரெல்லாம் சுண்டிப் போகும் வரை வெய்யிலில் வைக்கவும்.  இறுதியில் வண்டல் போல மிஞ்சும் சூரணத்தை நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

                                      
இந்தச் சூரணத்தை 500 மி.கி. அளவு எடுத்து, காலை  உணவுக்கு  முன், தண்ணீரில் கலந்து சாப்பிட வெண்படை குணமாகும்.
                                                         
                                      
மருந்துண்ணும் போது அகத்திக்கீரை, பாகற்காய், சிறுகீரை ஆகியவற்றையும், கருவாட்டையும் சேர்க்கலாகாது.
                             
                                      
முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவில் புளிப்பு தவிர்க்கப்படவேண்டும்.
                                                     

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...