Tuesday, October 8, 2013

அசைவ உணவு

நாகரிகம் தெரியாத காலத்தில் காட்டு மிராண்டியாகத் திரிந்த மனிதன் கிடைத் ததை உண்டு உயிர் வாழ்ந்தான். அவனுக்கு உயிர் வாழ உணவு தேவை என்றளவே தெரிந்திருந்தது. நாளாக நாளாக நிலத்தைப் பண்படுத்தி, சாகுபடி செய்யக் கற்றுக் கொண்டபின், அவனது உணவிலும் மாற்றம் ஏற்பட்டது.

தானியங்கள், காய்கறிகள் பழங்களைச் சாப்பிட ஆரம்பித்தான். நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உணவைச் சமைத்து சாப்பிட முடியும் என்பதைத் தெரிந்து கொண்டதும் சைவ உணவை அதிகமாக உட்கொள்ளத் துவங்கியதும், விவசாயமும் வளர ஆரம்பித்தது.

கால்நடைகளைக் கொன்று தின்பதற்குப் பதில் அவற்றை விவசாய வேலைகளுக்குப் பயன் படுத்தவும் அவற்றிடமிருந்து கிடைக்கும் பால், தயிர் போன்றவற்றை உணவாக அருந்தவும் தெரிந்து கொண்டதும்,
கால்நடைகளைவளர்க்க ஆரம்பித்தான்.

ஆடு, மாடுகளின் மாமிசத்திற்குப் பதில் சுவை தரும் பால் பெரும்பாலோரது உணவாகியது.

ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளாகத் தான், ஜனத்தொகை அதிகரிக்க ஆரம்பித்ததும், உணவின் தேவையும் பெருகவே அவன் தாவர உணவுக்கு மாற்றாக வேறு உணவை நாடவேண்டியதாயிற்று.

மீண்டும் அசைவ உணவில் அவன் நாட்டம் திரும்பியது. விஞ்ஞான அறிவு வளர ஆரம்பித்ததும் தாவர உணவில் கிடைக்கும் புரதச்சத்தை விட மிக அதிகளவு புரதமும், அமினோ அமிலங்களும் (மாமிச உணவில்) இருப்பதை அறிந்து மனிதர்களுக்கு அது தேவையான உணவாகியது.
 

ஆனால், சமீபத்தில் நடத்திய ஆய்வுகளிலிருந்து மாமிச உணவில் புரதமும், அமினோ அமிலங்களும் அதிகம் இருந்தாலும், அதனால் உடலுக்குத் தீமைகளும் அதிகம் விளைகின்றன என்று கண்டறியப் பட்டது.

நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தே உடல் நலமும் அமைகிறது. இரைப் பையில் ஜீரண நீர் சரியாக சுரக்க இந்தப் புரதமும், அதை ஜீரணிக்கும் சத்துக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாமிச உணவு சிறுகுடலில் தங்கி சரியாக ஜீரண மாகாமல் ஜீரணநீர் அதிகம் சுரக்க வேண்டியிருப்பதால் குடல் பகுதியை அந்த அமிலங்கள் பெரிதும் பாதிக்கின்றன.

குடலில் ஜவ்வு போன்ற மெல்லிய பகுதிதான் குடலைப் பாதிப் படையாமல் பாதுகாக்கிறது. இந்த அமில நீர் அதிகம் சுரப்பதால் ஜவ்வுப் பகுதிகள் அரிக்கப்பட்டு அதனால் குடல் புண் (அல்சர்) உண்டாகிறது.
மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.

தவிர, மாமிச உணவைத் தயாரிப்பதற்கு மசாலாப் பொருள்களை அதிகம் பயன் படுத்துவதாலும், மாமிச உணவுடன் சேர்த்து மதுபானங்களை அருந்துவதாலும் மேலும் தீங்கை விளைவிக்கிறது.

உணவுக் குழாய், வயிற்றுப் பகுதி, குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் நமது உணவின் தன்மைக்கு ஏற்ப அமைகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சில வகைமீன்கள், அதிகளவு உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் முதலான நைட்ரோ அமினோ அமிலச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவாலும் அண்ணக்குழாய், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட ஏதுவாகிறது.

புரதமும், கொழுப்புச் சத்தும் மிகுந்த, நார்ச்சத்து அதிகமில்லாத உணவுகளாலும், பெருங்குடலில் அல்சர் நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிலும் முக்கியமாக அசைவ உணவுகளில் இந்த தீமை அதிகமாகிறது.

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட்டு மலம் சரியாகக் கழியாமல் குடல் பகுதி தடித்து வீங்கல் காரணமாக ஜவ்வுப் பகுதி அரிக்கப்பட்டு அல்சர் ஏற்படுகிறது.

தவிர, விலங்குகளிலிருந்து கிடைக்கும் மாமிச உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கவும் செய்கிறது. உணவு ஒவ்வாமை (அலர்ஜி) உடலுக்கு சில வகை உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் போவது காரணமாகவும் நோய் ஏற்பட வழிபடுத்துகிறது.

மூட்டு வலிகள் பற்றி கடந்த சில காலமாக ஆராய்ந்து பார்த்ததில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை உட்கொள்ளும்போது நோயின் தீவிரம் குறைவதைக் கண்டறிந்துள்ளனர்.

சிலவகை அலர்ஜி நோய்கள் ஏற்படுவதற்கும் அசைவ உணவே காரணம் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மாமிச உணவை ஜீரணிக்கையில் சில நச்சுப் பொருட்களும் வெளிப்படுகின்றன. இதனால் சில நோய்கள் ஏற்படுகின்றன. மாமிச உணவால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. 

கலோரிச் சத்துஅதிகம் உள்ளது. கொழுப்பும், புரதமும் மிகுந்து
காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவுகளும் அதனால் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

மேனாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் தமது உடம்பில் காயங்கள் ஏற்படுத்தி சில காலம் மாமிச உணவைச் சாப்பிட்டு வந்தபோது, புண் ஆறாமல் இருந்ததைக் கண்டார். பின் சைவ உணவுக்கு அவர் மாறியதும் விரைவில் குணம் ஏற்பட்டதை அறிந்தார்.

சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர் களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.

புலால் உணவால் விலங்கு உணர்வுகளே மிகுந்து காணப்படுகின்றன. கொலை வெறித்தாக்குதல் போன்ற ராட்சச குணங்கள் மேலோங்குவதற்கு அசைவ உணவை  உட்கொள்வதே காரணமாகும். மாறாக சைவ உணவை அருந்துபவர்களிடம் அன்பு, கருணை, கனிவு போன்ற தெய்வீக குணங்கள் நிறைந்திருப்பதுடன், சைவ உணவை உட் கொள்பவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாகவும் விளங்குகின்றனர்.

அண்மைக்காலமாக மேலை நாடுகளில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவையே உட்கொள்ளுமாறு தீவிர பிரசாரம் நடந்து வருவது கண்கூடு. சைவ உணவின் சிறப்பை உணர்ந்துதானோ, வள்ளுவரும் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் புலாலைத் தள்ளும்படி வலியுறுத்தியிருப்பதைக் காணலாம்.

கொல்லான், புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும்
என்று அவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

பப்பாளி பழத்தின் அற்ப்புதம் !!!

17 - ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது பப்பாளி. இதன் பூர்வீகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.


வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும் - நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும்  பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100
கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சிஇருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும்

பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.


இரத்தம் சுத்தமாக.........


உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.

மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.

இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்


கறிவேப்பிலை





ணவுல கறிவேப்பிலையைச் சேர்க்கறதே... வெறும் வாசனைக்காகத்தான்னு ரொம்ப பேர் நினைக்கறாங்க. ஆனா, இந்த கறிவேப்பிலை அற்புதமான மூலிகை.

அது, உடம்புக்கு வலுவூட்டும்ங்கிறது பலபேருக்கு தெரியாத விஷயம். தலையில தேய்க்கக்கூடிய எண்ணெய், தைலம் மாதிரியான திரவப் பொருட்கள்ல கத்தாழை, அவுரி சேர்ப்பாங்க. இதுகூட, கறிவேப்பிலையும் அரைச்சு சேர்த்து வெச்சுக்கலாம். இப்படி சேர்க்கப்பட்ட எண்ணெய்/தைலத்தை தேய்ச்சுக்கிட்டா... நல்ல பலன் கிடைக்கும்.

இந்த எண்ணெய், முடிக்கு நல்ல பலம் கொடுக்குறதோட... முடி நல்லா வளரவும், முடி உதிராம இருக்கவும் செய்யும்.

தினமும் 2 ஈர்க்கு கறிவேப்பிலையை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா பித்தம் அதி கரிக்கிறதால வரக்கூடிய இளநரை மாறும். இதை தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டாத்தான் பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிங்க இதேபோல சாப்பிட்டு வந்தா நோய் கட்டுக்குள்ள வரும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, 2 டம்ளர் தண்ணி விட்டு, அரை டம்ளரா ஆகுறவரை நல்லா கொதிக்க வெச்சு குடிச்சா... மலச்சிக்கல் இல்லாம இருக்கலாம். கறிவேப்பிலையை துவையல் செஞ்சு சாப்பிட்டு வந்தா... வாந்தி, பேதி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல்னு வயிறு சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

சுக்கு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்குங்க. ஒரு உருண்டை சாதத்துல, அரை டீஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைப் போட்டு, நெய் விட்டு சாப்பிட்டா... ஜீரண உறுப்புகள் எல்லாம் வலுவாகும்.

வேப்பிலை மாதிரி, கறிவேப்பிலையையும் மஞ்சள் சேர்த்து அரைச்சி பூசிட்டு வந்தா... முகப்பரு, தேமல் மட்டுமில்ல, மற்ற தோல்நோய்களும் சரியாகும்.

கடுமையான காய்ச்சலால கஷ்டப்படுறவங்களுக்கு இந்த கறிவேப்பிலை கைகொடுக்கும். கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க. கூடவே துளசி ஒரு கைப்பிடி, ஆடாதொடை இலை ஒண்ணு, வேம்பு ஒரு ஈர்க்கு, ஒரு டீஸ்பூன் சீரகம் இதையெல்லாம் ஒண்ணா போட்டு, 4 டம்ளர் தண்ணி விட்டு 2 டம்ளராகுற வரை கொதிக்க வையுங்க. இதை 2 மணி நேரத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் குடிச்சுட்டு வந்தா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் சரியாயிரும். காய்ச்சல் இருந்தா 2, 3 நாள் வரை இதை குடிச்சா... நிச்சயம் பலன் கிடைக்கும்.


செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...