Tuesday, June 24, 2014

நாக்கும் அதன் தன்மையும்



நாக்கின் இந்த குறிப்பிட்ட பகுதி வாத, பித்த, கபத்தினை காட்டும்



அது போல் நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.

கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு

 மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்

பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்

வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி), 

நில நிறம் இதய கோளாறு

பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,

நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,

நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,

நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.

கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.

இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.


ஒவ்வாமை (அலர்ஜி)


சாதாரணமாக நாம் காணும் பல நோய்களுக்கு ஒவ்வாமை எனப்படும் அலர்ஜிதான் காரணம். தினந்தோறும் பயன்படுத்தப்படும் பலவகையான சோப்பு, பவுடர், பேஸ்ட், வாசனைப் பொருட்கள், எண்ணெய், சாக்ஸ், ஆடைகள், அணிகலன்கள் போன்ற பொருட்கள் முதல் தும்மல், தூசிகள், நெடி, உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள், சாதாரண தலைவலி மாத்திரைகள் போன்றவை வரை எது வேண்டுமானாலும் ஒருவருக்குஅலர்ஜியைத் தோற்றுவிக்கக்கூடும்.

இதன் காரணமாகவும், நாளுக்குநாள் அதிகரித்துவரும் தொழிற்சாலைக் கழிவு, சுற்றுச்சூழல்கேடு போன்றவற்றாலும், அலர்ஜியைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அண்மைக் காலமாக நம் மக்களிடையே அதிகரித்துவருகிறது.

அலர்ஜியால் ஏற்படும் நோய்கள் என்னென்ன?

அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில்தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்ற ஏற்படுத்தும். இன்னொருவருக்கோ மூச்சுமுட்டி திணறல் ஏற்படும்.

வேறு சிலர் வாந்தி, குமட்டல், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு போன்றவை. அதே அலர்ஜிப் பொருளால் உணவுப்பாதை பாதிப்படைந்து, இதுபோன்ற கோளாறுகளால் அதிகம் துன்பப்படுவார்கள். 

ஆக இந்த அறிகுறிகளக் கொண்டு பொதுவாக அலர்ஜி நோய்கள், தும்மல் நோய், விஷக்கடி, அலர்ஜி, ஆஸ்துமா என்று மூன்று பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

உடல் அங்கங்கு சிவந்து செம்மை படர்தல், ஆகாத பொருட்களால் தோலில் ஏற்படும் தொடுதோல் அழற்சி நோய், கரப்பான் எனப்படும் எக்சிமா என்னும் தோல் நோய், மன அழுத்தச்சோர்வு நோய், தசைவலிகள், மூட்டு வீக்கம் மற்றும் வலிகள், கண்களில் அரிப்பு, நீர் வடிதல், சிவத்தல், காகளில் சீழ்வடிதல், அரிப்பு, தற்காலிகமாகச் செவி கேளாமை போன்றனவும், அலர்ஜியின் அசாதாரண அறிகுறிகளாக வெளிப்படும் பல்வேறு நோய்களாகும்.

தூக்கமின்மை, தலைவலி, படுக்கையில் சிறுநீர்கழித்தல், சிறுநீர்பை தொந்தரவுகள், நெஞ்சுவலி, படபடப்பு, கை, கால்கள் சில்லிட்டுப்போதல், எப்போதும் பரபரப்புடன் இருத்தல், பிறப்பு உறுப்புகளில் நமைச்சல், அளவிற்கு அதிகமாக சுறுசுறுப்பு, வெட்டு வாதம் போன்றனவும் அரிதாகச் சிலருக்குஅலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

பிறப்பு உறுப்புகளில் அதிகமான அரிப்பு, எரிச்சல், புண் போன்ற அலர்ஜி அறிகுறிகளைக் கொண்டுதான் முதன் முதலில் சர்க்கரைநோய், பலவகைக் காளான், பால் வினைத் தொற்று நோய்கள் உடலில் மறைந்துஇருப்பது கண்டுபிடிக்கப்படுகின்றன.

தும்மலில் பல வகைகள் உண்டென்கிறார்களே, இது உண்மைதானா?

இந்த முக்கிய அறிகுறிகளக் கொண்டு தும்மல் நோயை அலர்ஜியால் வரும் தும்மல்நோய், அலர்ஜி இல்லாமல் வரும் தும்மல்நோய் மற்றும் வேறு காரணங்களால் வரும் தும்மல் நோய் என்று இலண்டனில் 1994 ஆம் வருடக் கருத்தரங்கில் இந்த நோயைப் பிரித்துஅணுகி, ஆராயவேண்டும் என்றுபரிந்துரைக்கப்பட்ட.து இதன் அடிப்படயில் தும்மல் நோய் பலவகப்படுகின்றது.

அலர்ஜியினால் வரும் தும்மல் நோய்ப் பற்றி?

பொதுவாக பெரும்பாலான சமயங்களில் பல்வேறு புல், பூண்டு, மரம் செடிகளின் மகரந்தத் துகள்களினாலேயே இத் தும்மல் நோய் ஏற்படுகின்றது.பல்வேறு மகரந்தத்துகள்கள், பல்வேறு காலங்களில், பல இடங்களுக்குக் காற்றில் பரவுவதால் இத் தும்மல் நோய் உண்டாகின்றது.

எனவே, ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும் உதாரணமாகபனி, பூ பூக்கும் காலங்களில் மட்டும் இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் தும்மிக்கொண்டே இருப்பார்கள். வருடத்தின் மற்ற மாதங்களில் இந்நோய் அறிகுறிகள் எதுவும் தெரியாமலேயே இருக்கும்.

எனவேதான் இது ஒவ்வாமை பருவக் கால மூக்கழற்சி நோய் (Allergic Seasonal Rhinitis) என்றழைக்கப்படுகின்றது. இத்தும்மல் நோய் பெரும்பாலும் இளவயதிலேயே ஆரம்பிக்கும். சிறுவர்கள் இளைஞர்கள், நடுத்தர மற்றும் வயதானவர்களை விட இளம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இளங்காலை அல்லது விடியற்காலை மற்றும் மாலை வேளைகளில் காற்றில் மகரந்தத்துகள்களின் அளவு அதிகம் இருப்பதால் இவ்வகையான மூக்கு அலர்ஜி இருப்பவர்களில் பெரும்பாலோர் படுக்கையிலிருந்து எழுந்து குளித்து முடிக்கும் காலம் வரை பல மணித்துளிகளுக்குத்தொடர்ந்து தும்மிக் கொண்டே இருப்பார்கள்.

குறைந்தது 50 முதல் 100 தும்மலாவது தொடர்ந்து தும்முவார்கள். பின்பு நல்ல வெயில் வந்தவுடன் வழக்கம் போல் எந்த பாதிப்புமின்றி தங்கள் பணிகளைச் செய்வார்கள்.இது மிதமான தும்மல்நோய் ஆகும்.

இந்நோயால் துன்புறும் சிலரின் மூக்கில் கடுமையான எரிச்சல் அல்லது அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில், வாயின் மேற்புறத்தில் உள்ள அன்னச்சதையும் எரியும். அல்லது அங்கு நமைச்சல் ஏற்படும்.

எனவே நாக்கைக் கொண்டு அவ்வப்போது மேல் அன்னத்தைத் தடவிக் கொண்டோ அல்லது சப்புக் கொட்டிக் கொண்டோ இருப்பார்கள். பல சமயங்களில் தொண்டையும் எரியும். இவற்றைத் தொடர்ந்து பலமான தொடர் தும்மல்கள் ஏற்படும். தும்மித்தும்மித் துவண்டு விடுவதுமுண்டு. 

மூக்கிலிருநது வெறும் நீர் வடிந்தவண்ணம் இருக்கும். கண்களிலும்அதன் ஓரங்களிலும் அதிக நமைச்சலுடன் கூடிய ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கண்களில் நீர் தேங்கி நின்று, கண்கள் வீங்கிச்சிவந்துவிடும்.

சிலர் வருடம் முழுவம் தும்மல் நோயால் துன்பப்படுவார்கள். அவர்களின் மூக்கு எந்நேரமும் அடைப்பட்டிருப்பதால் இவர்கள் வாய் திறந்தபடியே மூச்சுவிடுவார்கள்.இரவு நேரங்களில் உற்பத்தியாகும் சளி தொண்டைக்கும் இறங்குவதாலும், எந்நேரமும், மூக்கு அடைபட்டுக் கிடப்பதாலும், இவர்கள் தூங்கும்போது குறட்டைச் சத்தமும் கேட்கும்.

தொண்டைக்குள் சளி அடைப்பதால் அவ்வப்போது தூக்கமும் கெட்டு, எழுந்து உட்கார்ந்து, சளியைத் துப்பிய பின்பு, சிறிது நிவாரணம் பெறுவார்கள். பகல் நேரங்களில் தொண்டையில் சளி சேர்வதால், தொண்டைக்கும், காதுக்கும் இடையே உள்ள காற்றைச் சமன்படுத்த உதவும். உட்செவிக் குழல் ( Eustachian tube) அடைத்துக் கொண்டு காதும் சரிவர கேட்க முடியாமல் போய்விடும். எனவே அவ்வப்போது வாயைத் திறந்து திறந்து மூடுவார்கள். இதனால் காது கேட்கும் திறன் சற்றுக்கூடுதலாகும்.

இந்நோய்க்கான முறையான சிகிச்சயை மேற்கொள்ளாவிடில் காற்றறைகளிலும், நடுக்காதுகளில் சளித் தேங்கி Allergic மற்றும் இது போன்ற நோய்கள் ஏற்பட்டு தலைவலி, காதுகளில் சீழ்வடிதல் போன்ற தொல்லைகள் ஏற்படுவதுடன் சிலர் இருமலாலும், தோல் தடிப்பாலும் ஆஸ்துமா இழுப்பாலும் கஷ்டப்படுவார்கள்.

இலேசான குளிர்காற்று,பனி, வெயில், தூசி,புகை, விரல்கள் போன்றன மூக்கில் பட்டாலே முன்பு சொன்ன அனைத்து அறிகுறிகளும் படிப்படியாகக் காலை நேரங்களில் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் ஆரம்பித்து பின்பு நாட்கள்,வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் தொடர்நது நீடிக்கும். இவ்வகையான தும்மல் நோய்க்கு வருடம் முழுவதும் இருக்கும் அலர்ஜித் தும்மல்நோய் (Perennial allergic rhinitis) என்று பெயர்.

எனவே இந்நிலை ஏற்படாமல் இருக்க முதலிலேயே தங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனப் பெறுவதே நல்லதாகும்.

இந்நோய்க்கு என்னென்ன பரிசோதனகள் முக்கியமாகச் செய்யவேண்டும்?

பொதுவாக அலர்ஜிப் பிணியாளர்கள் கூறும் நோய்க்குறி குணங்களைக்கொண்டு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். தும்மல் நோயைப் பொறுத்தவரை நோய் தோன்றியவிதம், இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள், எந்தெந்த மாதங்களில் நோய் தீவிரமடைகிறது, வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் பூந்தோட்டங்கள், மரம்,செடிகள் உள்ளனவா, சாதாரண ஜலதோஷத்திலிருநது இவ்வகையான தும்மல் நோய் எவ்வாறு வேறுபடுகின்றது, எந்தச் சீதோஷ்ண நிலைகளில் இந்நோய் குறைகிறது,

இதனுடன் மற்ற அலர்ஜி நோய்களாலும் துன்புறுகின்றனரா, பெற்றோர்கள் மற்றும் அவர்கள் வழி வந்தவர்கள் ஆஸ்துமா, கரப்பான், தோல் அலர்ஜி தொடர்பான நோய்க் குணங்களைக் கொண்டிருக்கின்றனரா?, அவர்கள் செய்யும் தொழில் என்ன? என்பது போன்ற மிகவும் விரிவாக Case history மேற்கொள்ளப்படவேண்டும்.

அதன் பிறகே ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ள சிறந்த மருந்துகளை தகுந்த மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ள வேண்டும்.

‘செல்’ (Cells) கண்டுபிடிப்புப் பற்றிய தகவல்கள்!


இது நாம் பேசிக்கொண்டிருக்கின்ற செல் (Cell Phone) அல்ல...

‘செல்’ எனும் வார்த்தைப் பிரயோகமே, 1665 ஆண்டிற்குப் பிறகுதான் நடைமுறையில் வந்தது. லியோன் ஹுக் என்பவரால் 1591 - ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணோக்கியின் (மைக்ரோ ஸ்கோப்) மூலம் உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட ரோபெர்ட் ஹுக் என்பவர், 

தேன் கூட்டில் உள்ள சிறிய அறைகள் போல, உயிரினங்களின் உடலில் நுண்ணிய தடுப்புச் சுவர்கள் கொண்ட சிறிய சிறிய அறைகள் நிறைய இருப்பதைக் கண்டுபிடித்தார். இவற்றைக் குறிப்பிடுவதற்கு அறை என்ற அர்த்தம் உள்ள, ‘செல்’ என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். 

அன்று முதல் இது அறிவியல் வழக்குச் சொல்லாக நடைமுறைக்கு வந்தது.

அவருக்கு பின் வந்த உயிரியல் அறிஞர்கள் பலரும், இந்த செல் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்ட போது, மனிதன், விலங்கு மட்டுமல்லாமல், செடி, கொடி, தாவரங்கள் அனைத்திலும் இந்த செல் இருக்கும் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். 

இதனை முதலில் 1839 ஆண்டு ஸ்வான் என்ற விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார். 1938 - ம் ஆண்டு ஸ்லீடன் என்ற விஞ்ஞானி தனது தாவரவியல் ஆய்வின் மூலம், ஸ்வானின் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.

தொடக்க காலகட்டங்களில், இந்த செல் பற்றிய ஆய்வு, செல் சுவர் அளவிலேதான் இருந்து வந்தது. செல் சுவரைத் தாண்டி ஆய்வு செய்வதற்குப் போதுமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. 

19 -  ம் நூற்றாண்டின் துவக்கத்தில், மின்னணு நுண்நோக்கி (Electron Microscope) கண்டு பிடிக்கப்பட்டப் பின்பு, அதன் துணையால் 1831ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரவ்ன் என்ற விஞ்ஞானி, செல்லின் மையப் பகுதியல் உருண்டை வடிவிலான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்து, அதற்கு நியூக்ளியஸ் (Nucleus) என பெயரிட்டார். 

அதனைத் தொடர்ந்து, உயிரினச் செல் சுவரை அடுத்து ஒரு வகையான கெட்டிப் பொருள் இருப்பது 1846 - ம் ஆண்டு வான்மோல் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைக் கண்டுபிடித்த ஆரம்பக் காலகட்டங்களில், அது பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது. பின்னாளில் அதற்கு புரோட்டோபிளாசம் என்ற பெயர் நிலை பெற்றது.

மேலும், பல ஆய்வுகளை உயிரியல் விஞ்ஞானிகள் மேற்கொண்ட போது, திரவப் பொருள் இருப்தையும் அறிய முடிந்தது. அதற்கு சைட்டோப்பிளாசம் எனவும் பெயர் சூட்டப்பட்டது. 

1890 - ம் ஆண்டுவாக்கில் இந்த சைட்டோப் பிளாசத்திற்குள் நுண்ணிய திடப்பொருள் மிதந்து கொண்டிருப்பதை அல்ட்மான் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். 

அதனை இன்று மைட்டோ காண்ட்ரியா (Mitochondria) என்று அழைக்கிறோம். 

அதே ஆண்டில்தான் வால்டேயேர் எனும் விஞ்ஞானி உட்கருவினுள் (Nucleus) குரோமோசம்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

விஞ்ஞானிகளின் ஆய்வுப் பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்ததன் பயனாக, 1953 - ம் ஆண்டு வாட்சன், க்ரிக் என்ற இரு உயிரியல் விஞ்ஞானிகளும் சேர்ந்து, குரோமோசம்களுக்குள் மரபணுக் கூறான டி.என்.ஏ. (D.N.A) இருப்பதைக் கண்டுபிடித்தனர். 

இந்த கண்டு பிடிப்பு, உயிரியல் ஆய்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தது. 

மேலும் அது திகிலூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்திருந்தது. மனிதப் பரம்பரைச் செய்திகள் அனைத்தும் அதில் உள்ளடக்கப் பட்டிருந்ததை அறியமுடிந்தது. மேலும் ஆய்வினை மேற் கொண்ட போது முடிவில்லாத சங்கிலித் தொடராக அதன் செய்தி தொடர் அமைந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.

மரபணுக் கூறான, டி.என்.ஏ. (D.N.A) வில், பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளில் 3 விழுக்காடு தகவல்கள்தான் இது வரை அறியப்பட்டுள்ளன. 

அந்த தகவல்கள் மட்டும் பல லட்சம் பக்கங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கின்றன என்றால், அறியப்படாத 97 விழுக்காடு தகவல்கள் எத்தனை கோடிப் பக்கங்களை நிரப்பக் கூடியதாக இருக்கும் என்பது அறிவியல் மேதைகளுக்கே தலை சுற்றுவதாக விளங்குகிறது. 

எனவேதான், 1958 - ம் ஆண்டு கோட்டர்ட் என்பவர் செல்லடக்கச் செய்திகள் அனைத்தையும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால், உயிரினத்தின் உண்மை வடிவத்தைப் புரிந்து கொள்வோம் என்ற அறிவிப்பைச் செய்தார்.

இன்றும் செல்களைப்பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

டி.என்.ஏ ( D N A )


உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் டி.என்.ஏ என்கிற மூல பொருட்களை கொண்டே உருவாக்கப்படுகின்றன. 

அனைத்து உயிரினங்களின் உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏவை தான் சார்ந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த டி.என்.ஏ பற்றிய சில தகவல்கள் :

1. டி.என்.ஏ என்பதன் முழுபெயர் டிஆக்சிரைபோ நுக்ளிக் ஆசிட் (Deoxyribonucleic acid) தமிழில் “ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்” எனப் பொருள் தரும். உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் வருவதற்கு டி.என்.ஏவே காரணமாகும்.

2. இதன் வடிவம் ஓர் நீண்ட ஏணியை முறுக்கியது போன்று இருக்கும். இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப் படுகின்றன, அடினீன் (adenine) குவானீன் (guanine) தைமீன் (thymine) சைற்றோசின் (cytosine) போன்ற அமினோ அமிலங்களையும் சுகர் மற்றும் ஃபொஸ்பேட் அணுக்களையும் கொண்டே உருவாக்கபட்டுள்ளன.

3. இந்த டி.என்.ஏ வடிவத்தை ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃப்ரன்சிஸ் க்ரிக் 1953 - ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள். 

4. மனித உடலிலுள்ள டி.என்.ஏகளின் எண்ணிக்கையும் அதன் செயல்பாடுகளையும், மரபியல் தகவல்ளையும் கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டமே மனித மரபகராதித் திட்டம் (Human genome project).

5. இந்த திட்டம் 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2003ம் ஆண்டு நிறைவடைந்தது.

6. நமது உடலிலுள்ள டி.என்.ஏகளை மொத்தமாக மரபகராதி(Genome) என்பார்கள். மரபகராதி என்பது டி.என்.எயில் குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப் பற்றிய அனைத்த மரபியல் தகவல்ளையும் குறிக்கிறது.

7. நமது மரபகராதியில் மொத்தம் 3,000,000,000 டி.என்.ஏகள் உள்ளன.

8. உண்மையென்ன வென்றால் நம்முடைய டி.என்.ஏ போலவேதான் நம் பக்கத்திலுள்ள அறிமுகமில்லாத நபரின் டி.என்.ஏ அமைப்பும் 99.9 சதவிகிதம் ஒத்து இருக்கும் . 0.01 சதவீகிதத்தில்தான் வேறுபாடு.

9. சமீபத்திய ஆராய்ச்சியின்படி நவீன யுக மனிதன் ஆதிமனிதனாகிய நியண்டர்தால் மனிதனின் டி.என்.ஏ களில் 1 லிருந்து 4 சதவிகிதம் வரை பெற்றுள்ளான். 

ஆனால் மனிதக் குரங்குடன் 96 லிருந்து 99 சதவிகிதம் வரை ஒத்துள்ளது.

இதை வைத்துத்தான் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என டார்வின் (தவறாக) சொன்னார்.

மனிதனும் பாக்டீரியாவும்….!


"பாக்டீரியா"

“பாக்டீரியாதான் இந்த உலகத்தை ஆள்கிறது, மனிதர்களாகிய நம் உடலையும் சேர்த்து ஆள்கின்றது, உண்மையில் நாம் வெறும் மனிதர்கள் அல்ல, நடமாடும் பாக்டீரியாக்களின் தொகுப்பு. 

அதுமட்டுமல்லாமல், நாம் தாங்கிச் செல்லும் பாக்டீரியாக்கள்தான் நம் உடல் நலத்திற்க்கும், மேம்பாட்டிற்க்கும் காரணம்“ இப்படியெல்லாம் நான் சொன்னா, “யோவ், எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி? என்று என்னிடம் சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதிக்கில்லை!

ஆனால் உணமை நண்பர்களே, இதை சத்தியமாக நான் சொல்லவில்லை! ஜெரோன் ரேயஸ் (Jeroen Raes) அப்படீங்கிற ஒரு ஜெர்மனி நாட்டு ஆய்வாளர், பிரபல அறிவியல் வார இதழ் (நேச்சர்) Nature- ல் வெளியான தன் சமீபத்திய ஆய்வறிக்கையை ஆதாரமாக வைத்துக்கொண்டு சொல்கிறார்.

மனிதக் குடல் ஒரு பாக்டீரியா காப்பகம்!

நம்மளோட குடல் உண்மையில ஒரு பாக்டீரியாக் காப்பகம்தான்னு உங்களில் சில/பல பேருக்குத் தெரிந்திருக்கும். அதாவது, நமது குடலில் பல்லாயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்பதும், ஆனா அதனால் நமக்கு நன்மைதானே தவிர கெடுதல் எதுவும் இல்லை என்பதுவும் முன்பே நமக்கு தெரிந்த விசயம் என்றாலும், மனிதக் குடலின் உள்ளிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றிய முழுமையான விவரம் இதுவரை (எந்த) விஞ்ஞானிக்கும் கூட சரியாத் தெரியாது!

ஆனால், சமீபத்திய ஒரு மரபணு ஆராய்ச்சியில், மனிதர்களின் உடலில் இருக்கின்ற வேற்று உயிரின மரபணுக்கள் எத்தனை என்று கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். அந்த ஆய்வு முடிவில் தான், நமது உணவுக்குழாயில் கிட்டத்தட்ட 170 விதமான பாக்டீரியா இனங்கள் வாழுகின்றன (இதுவரைக்கும் தெரியாத) ஒரு பெரிய அறிவியல் உண்மையை கண்டுபிடித்திருக்கின்றார்கள்!

ஆக 170 பாக்டீரியா இனங்கள் நமது குடலுக்குள் குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாது என சொல்லுகின்றது இந்த ஆய்வறிக்கை!

நமது உடலில் இருக்கின்ற கிட்டதட்ட 99% மரபணுக்கள் எல்லாம் நம்ம குடலுக்குள்ளே (வாடகை கூட கொடுக்காமல் ஓசியில்) தங்கியிருக்கின்ற பாக்டீரியாவினுடையதுதான் என்பது தெளிவாகின்றது.

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்



எய்ட்ஸ் என்றால் என்ன?

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.

Acquired Immuno Deficiency Syndrome என்பதைத்தான் சுருக்கமாக AIDS என்றும், HUMAN IMMUNODEFICIENCY VIRUS என்பதனை எச்.ஐ.வி (HIV) எனவும் கூறுகிறோம். 

அதாவது, மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை குறைத்திடும் வைரஸ் கிருமி உள்ள நபரையே எச்.ஐ.வி தொற்றுள்ள நபர் என்கிறோம். 

நமது உடலில் இயற்கயாகவே ரத்தத்தில் நோயை எதிர்க்கும் வெள்ளை அணுக்கள் உள்ளது. நோய் வராமல் தடுப்பது வெள்ளை அணுக்களின் பணியே. நோய்கிருமிகள் நமது உடலின் எந்த பகுதியிலாவது நுழைந்து விட்டால், வெள்ளை அணுக்கள் ஒன்று திரண்டு நோயை உருவாக்கும் நோய்க்கிருமிகளை போராடி அழித்து நம்மை நோயிலிருந்து காக்கும். 

ஆனால் எச்.ஐ.வி கிருமியானது நமது விந்து / ரத்தம்/ நிணநீர் வழியாக உள்ளே நுழையும் போது வெள்ளை அணுக்களைப் போல, தன்னை மாற்றி உள்ளே நுழைந்து வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கி விடுகிறது. 

வெள்ளை அணுக்களை அழிக்கத்துவங்கும் போது உடலில் எவ்வித அறிகுறிகளும் தெரிவதில்லை. வெள்ளை அணுக்கள் குறைவதால் மெல்ல மெல்ல உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இந்த நிலையில் பல நோய்கள் உடலின் உள்ளே புகுந்து உடலை பலவீனப்படுத்துகிறது பல நோய்களின் கூட்டு தொகுப்பையே எய்ட்ஸ் என்கிறோம்.

உடலில் வைரஸ் கிருமிகள் இருக்கும் நிலையினையே எச்.ஐ.வி நிலை என்கிறோம். தொற்றில்லாத நபருடன் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளும் போது எச்.ஐ.வி யை இவரால் பரப்ப முடியும்.

எச்.ஐ.வி உடலில் உள்ளது என்பதற்கு எவ்வித அறிகுறியும் தெரிவதில்லை. பிறரைப் போலவே இளம் வயதாக இருக்கலாம் அழகாக இருக்கலாம். ஆனாலும் அவர் கிருமிகளுடன் வாழ்பவர் ஆவர். இந்த நிலையே எச்.ஐ.வி நிலை.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். 

ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றின் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. 

ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.

எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.

அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும் போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

யாருக்கு எய்ட்ஸ் வரும்?

இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. (இந்த நிமிடத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளதோ?)
இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.

எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான்.

25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். 

“நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?

எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார்.

இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். ( சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றது.)



எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்) ஓரினச் சேர்க்கையால், எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2. பாதுகாப்பில்லாத வாய்வழிஉடலுறவு.

3. பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது.

4. கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

5. போதை பழக்கத்தினர் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது.

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவது தான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம்.

பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.

எய்ட்ஸ் எப்படி பரவாது?

1.சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.

2. கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.

3. பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.

4. நீச்சல் குளம் மூலம் மற்றும் சலூன் கடைகள் மூலம் பரவாது.

5. ஒவ்வொரு முறையும் தூய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.

6. இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

7. ஒன்றாக விளையாடுவதால், ஒன்றாக பயணம் செய்வது இதனால் வராது.


எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம் தான் அதை தடுக்க முடியும். 

பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலேயே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள்.

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்ட நபர்கள் செய்யக் கூடாதவை

• பாதுகாப்பற்ற உடலுறவு
• இரத்தம், விந்து, உடல் உறுப்புகளைத் தானம் செய்தல்
• பிளேடு, பல் துகக்கும் குச்சி, பிரஸ் இவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது
• போதை ஊசி பழக்கம் கொண்டவர்கள், ஊசிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது
• காது குத்துதல், பச்சை குத்துவது அதற்கு பயன்படும் உபகரணங்களை சுகாதாரமின்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.

எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.
* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.
* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.
* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1. திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.

2. எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.

3. தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

1. ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.

2. மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.

3. நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய சந்தேகங்களுக்கு இலவச
தொலைபேசி எண் : 1800 419 1800

தொண்டை வலி.


நாள் முழுவதும் சம்பாதிக்கவும், ஒவ்வொரு நிமிடமும் தொழிலில் பணம் கொட்டும் நேரத்தையும் வீணாக்க முடியாது ஓடித்திரியும் மனிதர்கள். அதனால் எந்த நோயானாலும் உடனடியாகக் குணமாக வேண்டும். அதற்கு பணத்தைக் கொடுத்தால் எதையும் செய்துவிட முடியும் என்பதும், எந்த நோயானாலும் ஆண்டிபயோடிக் மருந்துகளை போட்டால் உடனே குணமாகும் என்பதும் சிலரது திடமான நம்பிக்கைகள்.

அந்த எண்ணங்கள் இரண்டும் தவறானவை என்பதை அவர்களது அனுபவங்கள் சொல்லிக் கொடுத்து விடும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. 

நல்ல காய்ச்சலோடு நடுங்காத குறையாக, சாப்பாடு விழுங்க முடியாத அளவு தொண்டை வலி.இரண்டு நாட்களாக உப்புத் தண்ணிரால் வாயைக் கொப்பளித்தும். குணமாகவில்லை என்றால் அவசியம் மருத்துவரை அணுகவும்? 

தொண்டை வலிகள்


தொண்டை வலிகள் அடிக்கடி ஏற்படுபவை என்றாலும், வலியானது பொதுவாக அடித் தொண்டையில் வேதனையைக் கொடுக்கும். 


இந்த தொண்டை வலி கடுமையாக இருப்பது. ஒரு பக்கம் மட்டும் வலிப்பது, சுரண்டுவது, அரிப்பது, எரிவது, எச்சில் விழுங்குவதில் சிரமம் எனப் பல வேறுபாடுகள் உண்டு.

ஆனால் பெரும்பாலான தொண்டை வலிகள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. மருந்துகள் சாப்பிடாமலேயே மாறக் கூடியவை. 


தொண்டை வலி என்பது ஒரு நோயல்ல. அது ஒரு அறிகுறி மாத்திரமே. பல்வேறு நோய்களில் இதுவும் ஒரு அறிகுறியாக வெளிப்படும். சில தருணங்களில் காது வலியும் சேர்ந்து வருவதுண்டு.

தொற்று நோய்கள்

முக்கிய காரணம் சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். பெரும்பாலான காய்ச்சல்கள் தொண்டை வலியுடன், மெல்லிய தொண்டை தடிமன், உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் வரும். சிலருக்கு இருமல் தொடரும். சில தருணங்களில் இதுபோன்ற தருணங்களில் மலம் இளக்கமாகப் போவதும் உண்டு. இதற்கு மருந்துகள் தேவைப்படாது. தானாகவே குணமாகிவிடும்.

குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம்.

மொனோநியுகிளியோசிஸ் என்பது வழமையான வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். தொண்டை வலியுடன் டான்சில் வீங்கியிருக்கும். இத்துடன் காய்ச்சல், களைப்பு, சோர்வு, இயலாமை, தலையிடி போன்ற அறிகுறிகள் முக்கியமாக இருக்கும். அத்துடன் கழுத்தில் நெறிக்கட்டிகள் இருக்கும். நோய் தணிய ஒரிரு வாரங்கள் செல்லும். நெறிக்கட்டிகள் மறைய மேலும் ஒரிரு வாரங்கள் செல்லும்.

மேற்கூறிய அனைத்தும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுபவை. இதற்க்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் உதவாது. ஓய்வு எடுத்தல், உப்பு நீரால் வாய் கொப்பளித்தல் போன்றவை உதவும்.

பாக்டீரியா தொற்று நோய்கள்

இதில் முக்கியமானது ஸ்ரெப்ரோகோகஸ் கிருமியால் ஏற்படும் தொண்டை வலியாகும். காய்ச்சல் இருந்தபோதும் தொண்டை தடிமன் சளி மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதில்லை. ரூமாடிக் இருதய நோய் வருவதற்குக் காரணம் இதுதான்.

தொண்டை வலியுடன் வரும் பாக்டீரியா தொற்றில் டான்சில் வீக்கம், 
epiglottitis, uvulitis இவற்றுடன் பாலியல் தொற்று  நோய்களான கொனரியா, கிளாமிடியா போன்றவையும் அடங்கும்.

கிருமித் தொற்று அல்லாத தொண்டை வலிகள்

வாழ்க்கைச் சூழலிலிருந்து தொண்டையை உறுத்தும் பொருட்களாலும் சாதாரண தொண்டை வலிகள் ஏற்படுகின்றன. வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைவான நேரங்களில் தொண்டை வலி பொதுவாக ஏற்படுகிறது. புகைத்தல், சூழலில் தூசி அதிகரித்து மாசுறுதல் போன்றவையும் காரணமாகலாம்.

இதைத் தவிர தொண்டைக்குள் நாசி நீர் இறங்கல் (Postnasal drip) மற்றொரு காரணமாகும். பொதுவாக எந்நேரமும் எமது நாசியில் நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது. நாம் இதை உணர்வதில்லை. தொண்டை தடிமன் போன்ற நோய்கள் ஏற்படும்போது மூக்கால் நீராக ஓடும்போதே நாம் அதனை உணர்கிறோம். அத்தருணங்களில் மூக்கிலிருந்து அதிகளவு நீர் சுரந்து தொண்டைக்குள் இறங்கும்போது சில தருணங்களில் தொண்டைவலியும் ஏற்படுவதுண்டு.

பலர் மூக்கிற்கு பதிலாக வாயால் மூச்சு எடுத்துவிடும் நிலமை ஏற்படுகிறது. ஓவ்வாமைகளால் மூக்கு அடைப்பு ஏற்படுவது, குறட்டை விடுவது போன்றவற்றால் இது நேரலாம். இதுவும் தொண்டைவலியை ஏற்படுத்துவதுண்டு.

இரைப்பையில் இருக்கும் அமிலம் மேலெழுந்து வருவது தொண்டைவலிக்கான மற்றொரு முக்கிய காரணமாகும். 
நமது இரைப்பையில் அமிலம் பொதுவாகச் சுரக்கிறது. இது இரைப்பையிற்குள் மட்டுமே இருந்து உணவுச் செரிமானத்துடன் சேர்ந்து சிறு குடலுக்குள் செல்ல வேண்டியது. மாறாக, மேலெழுந்து நெஞ்சறைக்குள் இருக்கும் களத்திற்குள் வந்தால் அது புண்ணாகலாம்.

இதை மருத்துவத்தில் gastro esophageal reflux என்பர். நெஞ்செரிப்பு, உணவு மேலெழுந்து வரல், புளித்த ஏப்பங்கள், வாயில் அமிலச் சுவை போன்ற பல அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு இதனால் இருமலும், ஆஸ்த்மாவும் ஏற்படுவதும் உண்டு.

சில தருணங்களில் அத்தகைய அறிகுறிகள் ஏதும் இன்றி தொண்டைவலி மட்டும் தோன்றவும் கூடும்.

ஆண்டிபயோடிக் மருந்துகள் தேவையா?

இக் காரணங்கள் அனைத்தையும் சேர்த்து நோக்கும் போது தொண்டை வலியானது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது தெரிகிறது. கிருமித் தொற்று அல்லாத காரணங்கள் பலவும் இருக்கின்றன. எனவே அவசரப்பட்டு ஆண்டிபயோடிக் மருந்து போடுவது அவசியமற்றது.

அவசியமற்றது மட்டுமல்ல, ஆபத்தானது எனவும் கூறலாம்.

ஏனெனில் அவற்றால் ஒவ்வாமை எதிர்வினைகள் (Allergy) ஏற்படலாம். ஒரு முறை ஒவ்வாமை ஏற்பட்டால் மீண்டும் அந்த மருந்தை அவர் உபயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் ஆண்டிபயோடிக் மருந்துகளால் பல பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. ஓங்காளம், வயிற்றுப் புரட்டு, பசியின்மை, வாந்தி, வயிற்றோட்டம், தோல் அழற்சி எனப் பல வகையானவை. அத்துடன் பங்கஸ் கிருமிகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

முக்கிய பாதிப்பு ஆண்டிபயோடிக்கிற்கு எதிரான ஆற்றலை பெற்று கிருமிகள் (Antibiotic resistance) பெருகுவதாகும். அடிக்கடியும் தேவையற்ற விதத்திலும் இவற்றை உபயோகிக்கும் போது நோய்க் கிருமிகள் அவற்றை எதிர்த்து வளரும் ஆற்றலைப் பெறுகின்றன. இதனால் அடுத்த முறை அதைவிட வீரியமான ஆண்டிபயோடிக் மருந்துகளை உபயோகிக்க நேர்கிறது.

முன்பு வழக்கமாக உபயோகிக்கப்பட்ட பல மருந்துகள் வீரியமிழந்து இப்பொழுது செயல்படாமல் போய்விட்டன.

"புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றவே" என நீங்கள் கேட்கலாம். உண்மையில் புதிய ஆண்டிபயோடிக் மருந்துகளைக் கண்டுபிடிப்பது மிகக் குறைவாகவே இருக்கின்றன. இதனால் கடுமையான கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. Methicillin-resistant Staphylococcus aureus (MRSA) போன்ற மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் மருத்துவத்திற்கு உலகளாவிய ரீதியில் பெரும் சவாலாக மாறியுள்ளன.

எனவே அவசியமற்று ஆண்டிபயோடிக் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. இன்று பலர் தொண்டைவலி, காய்ச்சல் என்றவுடன் அமொக்சசிலின் (Amoxicillin) போன்ற மருந்துகளை மிட்டாய் சாப்பிடுவது போல முழங்கித் தள்ளுகிறார்கள். இதன் ஆபத்து பின் வரும் கால ஓட்டத்தில் தான் புரியும்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?


• உடலுக்கும் தொண்டைக்கும் சற்று ஆறுதல் கொடுங்கள். 
• உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது நல்லது. 
• சூடான நீராகாரங்களைப் பருகுவது நல்லது.
• நீராவி பிடிப்பதில் பலர் சுகம் காண்கிறார்கள்.

எத்தகைய நிலையில் மருத்துவரைக் காண்பது அவசியம்

• தொண்டை வலியுடன் வீக்கமும் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியம். 
• தொண்டை வலியுடன் நாக்கு உதடுகளில் வீக்கம் ஏற்பட்டால் 
• நீராகாரங்களை அருந்துவதும், மருந்துகளை விழுங்குவதும் கூட சிரமமான நிலையில் தவறாது அணுக வேண்டும். 
• நாக்கு வரண்டு தாகம் அதிகரித்து நீர் இழப்பு நிலை ஏற்படுதல், தலை நிமிர்த்த முடியாதபடி மயக்கம் போல வருதல். 
• தொண்டை வலியுடன் கழுத்தில் நெறிக்கட்டிகள் தெரிந்தால்.
• கடுமையான காய்ச்சலுடன் திடீரென தொண்டை வலி ஏற்பட்டால்.
• அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால்.

வீடுகளின் உற்புறக் காற்று மாசடைதல்


சிலரது வீட்டில் காற்றோட்டம் போதுமான அளவு இருக்காது. சரியானபடி ஜன்னல்கள் இல்லாமலோ, அப்படியே ஜன்னல்கள், கதவு இருந்தாலும் இயல்பாக திறந்து வைக்க முடியாத சூழலிலோ அவர்கள் வீட்டின் அமைப்பு இருக்கலாம், இதனால் அங்கு காற்றோட்டம் குறைந்து, அந்தக் காற்று மாசடைந்ததாக இருக்கும். 

மேலும் வீட்டின் காற்று மாசடைதலுக்கு முக்கிய காரணம் சிகரெட் புகைத்தல், கம்ப்யூட்டர் சாம்பிராணி என்ற ரசாயண வில்லையை பூசை அறையில் உபயோகிப்பது, அத்துடன் தரமற்ற ஊதுபத்தி போன்ற புகைகளை வெளிவிடும் சிலவற்றாலும், பழைய வீடுகளில் விறகு அடுப்பு உபயோகிப்பது போன்றவைகளாலும் காற்று மாசு அடைகின்றது.

இவ்வாறு வீட்டின் உற்புறக் காற்று மாசடைவது என்பது உலகளாவிய ரீதியில் சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது.

உலகளாவிய ரீதியில் வருடந்தோரும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் சுவாச நோய்களால் மரணமடைவது குறிப்பிடத்தக்கது. இவற்றில் பெரும்பாலானவர்கள் சிற்றுண்டி விடுதிகளிலோ, அல்லது வீடுகளில் பயன்படுத்தப்படும் விறகு அடுப்புப் புகைகளாலும், சிகரெட், வாசனை ஊதுபத்தி, ரசாயண சாம்பிராணி ஏற்படுத்தும் மாசுக்களால் ஆகும். சுகந்த மணத்தை ஏற்படுத்தும் புகைகளும் அத்தகையவையே.

ஆய்வு

வீட்டிற்குள் சாம்பிராணிக் குச்சி போன்ற வாசனை ஊது பத்திகளைக் கொழுத்துவதானது வீட்டின் உற்புறக் காற்றை மாசுபடுத்தி சுவாசப்பையில் உள்ள காற்று அறைகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது என அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

அரேபிய நாட்டு வீடுகளில் அதிகம் கொழுத்தப்படும் இருவகை சாம்பிராணிகளைப் புகைக்க வைக்கும்போது வெளிவரும் துகள்களையும் வாயுக்களையும் ஆய்வாளர்கள் இனங்கண்டார்கள். பின்னர் மனிதர்கள் சுவாசிக்கும் அறைகளில் அந்த வாசனைப் பொருட்களை புகைக்க வைத்தார்கள். அப்பொழுது அந்த வாசனைத்திரவியங்கள் தடவப்பட்ட ஊதுபத்திகளால் வெளிப்படும் புகையினால் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதே மாற்றங்களை ஒத்ததாக இருந்ததைத் கண்டறிந்தார்கள்.

Oudh, Bahkoor ஆகிய அந்த வாசனைப் பொருட்கள் அகர் மரத்திலிருந்து எடுக்கபட்டவையாகும். வாசனையைக் கொடுக்கும் சந்தன மரப்பிசின், சில எண்ணெய் வகைகள் போன்றவைகளும் அதில் கலந்திருந்தனவாம். அவற்றை எரிக்கும் போது carbon monoxide, formaldehyde, nitrogen oxides ஆகிய வாயுக்கள் வெளியேறி அறையின் காற்றை மாசடையச் செய்தன.

'எனவே இவற்றை எரிக்கும்போது வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்து அப்புகையை வெளியேறச் செய்து வீட்டின் காற்றை மாசடையாது காப்பது அவசியம்' என்கிறார்கள் University of North Carolina at Chapel Hill சேர்ந்த ஆய்வாளர்கள்.

இவர்கள் முன்பு செய்த மற்றொரு ஆய்வானது இந்த சுகந்த மணப் புகைகளால் கண், காது தொண்டை, சருமம் போன்றவற்றில் எரிச்சல் ஏற்படவும், ஆஸ்துமா, வேறு சுவாச நோய்கள், தலைவலி, இருதய நோய்கள் போன்றவையும் ஏற்படலாம் என்கின்றனர்.

உட்புற காற்று மாசடைதல்


உட்புற காற்று மாசடைதல் என்பது வீட்டுக்குள் மாத்திரம் அல்ல. வீடு, தொழில் செய்யும் இடம் அனைத்தையும் உள்ளடக்கும்.

உட்புற காற்றின் தரம் குறைவடைவதால் கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. சுவாசப்பை புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அத்துடன் ஆஸ்துமா போன்ற நீண்டகாலமாக தொடரும் சுவாச நோய்கள் வருவதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது.
மூக்கடைப்பு, கண் வரட்சி, ஓங்காளம், களைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அது மிகவும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

மிக முக்கியமான விசயம் காற்றை மாசடையச் செய்யும் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதுதான். அத்துடன் காற்றோட்டத்தை அதிகரித்து சுத்தமான காற்று உள்ளே வருவதற்கான வழிகளை மேம்படுத்த வேண்டும்.



உட்புறக் காற்று மாசடைவதற்கான சில முக்கிய காரணங்கள்
--------------------------------------------------------------------------------------------------


உயிரியல் மாசுக்கள்

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சணம், விலங்கு எச்சங்கள், தூசி, பூச்சி மற்றும் கரப்பான், பல்லி போன்றவற்றின் எச்சங்கள், போன்றவை உயிரியல் மாசு என்பதில் அடங்கும். 
இவற்றினால் உடலில் கிருமித் தொற்று ஏற்படுகிறது. ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஆஸ்துமா தூண்டப்படுவதற்கும் காரணமாகிறது. இவைகள் சாதாரணமான சிறிய பிரச்சனை எனச் சிலர் எண்ணினாலும் இவற்றால் உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலை நாட்களில் வருமான இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைகிறது. 


நாய் பூனை போன்றவற்றை வீட்டின் உள்ளே நுழையாது தடுப்பது முக்கியம். அத்துடன் தூசி மற்றும் பூச்சியின் தாக்கத்தைத் தடுப்பதற்கு படுக்கை விரிப்பு, தலையணை உறை, துணியாலான கால் மிதிகள், மேசை, மற்றும் தரை விரிப்புகள் ஆகியவற்றை அடிக்கடி துவைப்பதுடன் வெயிலில் உலர வைப்பது அல்லது இஸ்திரி போடுவது அவசியமாகும். தேவையற்ற குப்பை கூளங்களை அகற்ற வேண்டும்.

மறைமுகப் புகைத்தல்

மறைமுகப் புகைத்தல் (Secondhand Smoke) என்பது ஒளிந்திருந்து புகைப்பது என்பதல்ல. தான் புகைக்காவிட்டாலும் சுற்றுப்புறச்சூழலில் மற்றவர்கள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பையே குறிக்கிறது. 
கார்பன் மொனோ ஒட்சைட், போர்மல்டிஹைட் உட்பட சுமார் 200 க்கு மேற்பட்ட புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் மறைமுகப் புகைத்தலால் காற்றில் கலக்கின்றன. இதனால் சுற்றுப்புறம் பாதிக்கப்பட்டு, சுகாதாரக்கேடும் உண்டாகின்றது.


அமெரிக்காவில் மட்டும் இவ்வாறு வீட்டுக்குள் காற்றில் கலக்கும் சிகரெட் புகையினால் 3000 க்கும் மேற்பட்டவர்கள் சுவாசப்பை புற்று நோயால் இறக்கின்றனராம். அத்துடன் 50,000 க்கும் அதிகமான பேர்கள் இருதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனராம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளிடத்திலும் இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. நிமோனியா, சளி, இருமல், மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், காதில் கிருமித் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. வீட்டில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆஸ்துமா தோன்றுவதற்கும், ஏற்கனவே இருக்கும் ஆஸ்துமா மோசமடைவதற்கும் இந்த மறைமுகப் புகைத்தல் காரணமாகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி புகைக்காதிருப்பதுதான். அத்துடன் குழந்தைகளுக்கு அருகிலும், வீடு, தொழிலகம், உணவு சாலைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் புகைக்காதிருக்க வேண்டும்.

எரிப்பதால் வரும் மாசுபாடுகள்


விறகு, காஸ், எண்ணெய், நிலக்கரி, போன்ற எதை எரிப்பதாலும் வெளியாகும், புகை மற்றும் வாய்வுகள் காற்றை மாசடையச் செய்யும். அடுப்பு, விளக்கு, குளிர் காயும் இடம் போன்றவற்றிலிருந்து வெளியாகும் புகைகள் உதாரணங்களாகும்.

வெளிப்படையாகத் தெரியும் புகையை விட நிறமும் மணமும் அற்ற வாய்வான கார்பன் மொனோ ஒட்சைட், நைட்ரஜன் டை ஒட்சைட் போன்றவை ஆபத்தானவை. தலையிடி, ஓங்காளம், தலைச்சுற்று, களைப்பு போன்ற அறிகுறிகளை கார்பன் மொனோ ஒட்சைட் கொண்டு வரும். அதன் செறிவு அதிகமாயின் ஆர்பாட்டமின்றி மரணத்தையும் கொண்டு வரலாம். நைட்ரஜன் டை ஒட்சைட் வாயுவால் கண், காது தொண்டை ஆகியவற்றில் அரிப்பு, மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும். அத்துடன் கிருமித் தொற்றுகளுக்கும் வித்திடும்.

ரேடான் (Radon)

ரேடான் என்பது கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் காற்று வடிவக் கதிரியக்கத் தனிமமாகும்.

இது வீட்டின் சுவர், நிலம், அஸ்திவாரம், வடிகால்கள் போன்றவற்றில் ஏற்படும் வெடிப்புகளிலிருந்து வெளியேறுகிறது. இதனால் அமெரிக்காவில் மாத்திரம் வருடந்தோறும் 21,000 பேர் சுவாசப் புற்றுநோயால் நோயால் மரணமடைகிறார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. நமது நாடுகளில் இது பற்றிய விழிப்புணர்வு கிடையாது.

ஆஸ்பரோஸ் அல்லது கல்நார்

கூரைத் தகடுகளாக உபயோகிக்கும் ஆஸ்பரோஸ் ஆனது நுண்ணிய நார்களாலானது. இதன் தூசியிலிருந்து ஆஸ்பரோசிஸ் (asbestosis ) எனப்படும் சுவாசப்பை அழற்சி, சுவாசப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது.

இதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்டலாம் என்பதால் அவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்காகவே மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இன்னும் ஏராளம்

இவற்றைத் தவிர தினசரி நாம் உபயோகிக்கும் இன்னும் பல பொருட்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. 

ஓட்டுப் பலகை, தரைக்கம்பளம் போன்றவற்றை ஒட்டுவதற்கு பயன்படுத்தும் திரவத்திலிருந்து வரும் போர்மல்டிஹைட் ஆனது கண் எரிச்சல், இருமல், தொண்டை அரிப்பு, சரும அழற்சி, தலையிடி, தலைப்பாரம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

வீடு, கழிப்பறை, சமையலறை போன்ற இடங்களை சுத்தப்படுத்தும் ரசாயணப் பொருட்கள் (Detergents, disinfectant cleaners) கரப்பான், எலி போன்றவற்றிற்கான கிருமிநாசினிகள், பெயிண்ட் வகைகள் போன்றவையும் காற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றை உபயோகிக்கும் போது, பயன்படுத்தும் முறை பற்றி தயாரிப்பாளர்கள் தந்த குறிப்புகளை சரியாகக் கடைப்பிடிக்க வேணடும். 

ஒவ்வாமை

இன்று ஒவ்வாமை எனப்படும் அல்ர்ஜியுடன் தொடர்புடைய நோய்கள் அதிகரித்துள்ளன. கண் எரிச்சல், காது அரிப்பு, தும்மல், மூக்கில் ஒழுகுதல், தொண்டை அரிப்பு, இருமல், ஆஸ்துமா மற்றும் சருமநோய்கள் யாவும் அதிகரித்துள்ளன. ' சுற்றுச்சூழுல் மாசடைகிறது, கவனிப்பார் இல்லை' என அரசையும் மற்றவர்களையும் குறை கூறுகிறோம். 

நமது சூழலை, நமது வீட்டை, அதன் காற்றை சுத்தமாக வைத்திருக்க நாம் என்ன செய்திருக்கிறோம்? என நம்மை நாமே கேட்பது பயனுள்ளது ஆகும்.

வெடிப்புள்ள சுவர்கள். ஜன்னல் பொருத்திய இடத்துப் பிரிவுகள், அழுக்கான பூஞ்சணம் படிந்த சுவர்கள், புகை அடுப்பு, விளக்குத் திரி, சாம்பிராணிக் குச்சி, ஊதுபத்தி, கரைந்து உதிரும் பெயிண்ட் எனப் பலவற்றையும் அலட்சியம் செய்து விடுகிறோம். நமது வீட்டின் உட்புறக் காற்றை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதற்கு விலையாக பல நோய்களை வாங்க வேண்டியது வரும்.

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...