Wednesday, December 2, 2020

மருத்துவகுண மூலிகைகளும், மருந்துகளும்!

           

மருத்துவகுண மூலிகைகளும், மருந்துகளும்!

========================================

 


எந்த, எந்த நோய்க்கு, என்னவகையான மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தலாம் என்பதை நம்முடைய  சித்தர்கள் பெருமக்கள் சிறப்பாக அன்றே எழுதி வைத்துள்ளனர்.

 இந்த மூலிகைகளை இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும்கூட, இந்த குறைபாடுகளுக்கு இது தான் மருந்து என்பதையும் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டனர்.

 சித்தர்கள் குறிப்பிட்டுள்ள மூலிகை மருத்துவம் பற்றி ‘அருந்தமிழ் மருத்துவம் 500’ என்ற பாடலில் இருந்து மருந்துகளைக் காணலாம்.

 

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி

கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்

அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை

உணர்ச்சிக்கு நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு தாமரைப்பூ

சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை


கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு

விக்கலுக்கு மயிலிறகு

வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்


வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை

அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!

        இந்த பாடலை நன்கு உணர்ந்து, அதன் படி உடல் உபாதைகளுக்கு மூலிகைகளை மருந்தாக எடுத்து, நம்முடைய உடல் மற்றும் மன நலத்தைக் காத்து, முழுமையான ஆரோக்கியத்தை அடைந்து வாழ்வாங்கு வாழ்வோமாக.

No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...