Monday, November 11, 2013

பொடுகை ஒழிப்போம், கூந்தலை காப்போம்!


பெரும்பாலான பெண்களுக்கு பொடுகுத்தொல்லை இருக்கும், இவர்கள் கீழே சொல்லியுள்ள படி மூலிகை தேங்காய் எண்ணெய் தயார் செய்து தினமும் தலைமுடியில் தடவிவர பொடுகு,பேன்,ஈறு,தலைமுடி உதிர்தல் போன்றவைகளை தவிர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
*
வசம்பு- 150 கிராம்
*
வெள்ளைப்பூண்டு-50 கிராம்
*
ஒரு லிட்டர் தேங்காயெண்ணெய்.


முதலில் வசம்பை பொடியாக நறுக்கி நசுக்கிக் கொள்ளவும். வெள்ளைப்பூண்டை அரைத்துக் கொள்ளவும்.
வசம்பு

 
                            வெள்ளைப்பூண்டு

பின் இவையிரண்டையும் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு கடும்  சூரிய வெப்பத்தில் ஏழு நாட்கள் வைக்க வேண்டும். அதாவது நல்ல வெய்யிலில் ஏழு நாட்கள் வைத்திருந்து பின் அதை வடிகட்டி எடுத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளவும்.
                                  
இதை வழக்கமான தலைமுடி எண்ணையாக பயன்படுத்தலாம்.
                           
 *
இதனால் பொடுகு, ஈறு, பேன் ஒழியும். முடி உதிர்தலும் நிற்கும்.



No comments:

Post a Comment

செல் தொழிற்சாலை

செல் தொழிற்சாலை மேலே உள்ள இணைப்பை அழுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த அண்டத்திலுள்ள மிகவும் சிக்கலான வடிவமைப்புகளில...